புத்தபெருமானின் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியத்துவம் மிக்க மூன்று நிகழ்வுகள் இடம்பெற்ற வெசாக் தினத்தை கொண்டாடும் பௌத்த சமய பக்தர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கக் கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைவதாக எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, “எவரும் பிறப்பிலே உயர்ந்தவராகவோ தாழ்ந்தவராகவோ காணப்படுவதில்லை என்பதனை உறுதிசெய்து மனித வர்க்கத்தினர் அனைவரையும் சமமாக மதித்து ரூபவ் சமூகங்களுக்கிடையே காணப்பட்ட பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பிரிவினைகள் என்பவற்றினை அகற்றி பாரிய சமூக மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு புத்தபிரான் அவர்களால் முடிந்துள்ளது.
புத்தபிரான் புனித காலடி எடுத்துவைத்த இப்பூமியில் யுத்த மோதல்கள் மற்றும் துயர்கள் அற்ற வகையில் அனைத்தின சமூகங்களுக்கும் சமமான உரிமைகள் மற்றும் நீதி நியாயம் என்பன கிடைக்கப் பெறுகின்ற நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு நாம் அனைவரும் அணி திரளுதல் வேண்டும்.
சமாதானம் மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய சகவாழ்வின் ஒளியின் ஊடாக இப்புனித வெசாக் தினத்தில் எமது தேசத்தை மெருகூட்டுவோம். உங்கள் அனைவருக்கும் புனித வெசாக் தின வாழ்த்துக்கள் உரித்தாகுக!” எனத் தெரிவித்தார்.