Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மே தினத்தை 1ஆம் திகதி கொண்டாட தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்!

April 27, 2018
in News, Politics, World
0

உலக தொழிலாளர் தினத்தினை மே 1ஆம் திகதி கொண்டாட தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும், அந்த தீர்மானத்தினால் பௌத்த புனித நாளுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் துரைரட்ணசிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரனின் வீட்டில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “உலக தொழிலாளர் தினத்தினை பௌத்த புனித நாளுக்கு எந்தவித பங்கமும் ஏற்படாத வகையில் அரசாங்கத்தின் வேண்டுகோளை கௌரவப்படுத்த வேண்டும் என்பதனாலும், வெசாக் நிகழ்வுகள் நடைபெறுகின்ற இடங்களில் மே தின நிகழ்வுகளை நடத்தாது.

வடகிழக்கினைப் பொறுத்தவரையில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் இந்த பிரதேசத்தில் அங்குள்ள பௌத்த தலங்களுக்கு இடையூறுகளை விளைவிக்காத வகையில், உலக தொழிலாளர் தினத்தை மே 01 ஆம் திகதியே கொண்டாட வேண்டுமென்று தீர்மானித்துள்ளோம். இந்த தீர்மானம் எந்தவிதத்திலும், பௌத்த புனித நாளை அகௌரவப்படுத்துவதாக ஆகாது.

பெளத்த மக்களை கண்ணியப்படுத்தும் முகமாக யாழ். மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் பருத்தித்துறையில் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதற்கும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை உள்ளடக்கியதாக வெல்லாவெளிப் பிரதேச சபை விளையாட்டு மைதானத்திலும் கொண்டாட தீர்மானித்துள்ளோம்.

உலக மேதினக் கொண்டாடத்திற்கான தீர்மானம் பௌத்த மகாநாயக்கர்களின் வேண்டுகோளைப் புறக்கணித்ததாக அமையாது. அவர்களை கண்ணியப்படுத்தும் முகமாக இந்த மேதின நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன வட கிழக்கு வாழ் மக்களின் செயற்பாட்டினை கண்ணியப்படுத்தும் முகமாக மேதினக் கூட்டத்தை 12 மணிக்குப் பின்னர் நடாத்துவதற்கும், வர்த்தக வியாபார உரிமையாளர்கள், தமது வர்த்தக நிலையங்களை மூடி மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வர்த்தக் பெருந்தகைகளிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வேண்கோள் விடுக்கின்றது” என அவர் தெரிவித்தார்.

Previous Post

சமீர சேனாரத்னவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம்

Next Post

நிறைவேற்று அதிகார முறைமையை நீக்க அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்

Next Post

நிறைவேற்று அதிகார முறைமையை நீக்க அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures