Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவரை கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை

April 16, 2018
in News, Politics, World
0

கொழும்பில் பணி நிமித்தம் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவரை கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்களால் அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஆனைவிழுந்தானைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான வேலாயுதம் விக்கினேஸ்வரன் (வயது – 46) என்பவரே காணாமற்போயுள்ளார் என அவரது மனைவி திருமதி வி.விஜயகுமாரி முறைப்பாடு செய்துள்ளார்.

கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் குறித்த குடும்பத்தலைவர் பணியாற்றும் நிலையில் புத்தாண்டை முன்னிட்டு வீடு திரும்பவுள்ளதாக கடந்த 12ஆம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் அவர் தனது மனைவியிடம் தொலைபேசியில் கதைத்துள்ளார்.

அதன்பின்னர் அவர் தொலைபேசியில் தொடர்புகொள்ளவில்லை. அவரது அலைபேசியும் செயலிழந்துள்ளது.

கணவர் இரண்டு நாள்களாக அலைபேசியில் கதைக்கவுமில்லை வீடு திரும்பவுமில்லை என்ற நிலையில் அவரது மனைவி நேற்று (14-04-2018) சனிக்கிழமை அக்கராயன் பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன் குடும்பத்தலைவர் பணியாற்றும் நிறுவனத்துடன் தொடர்புகொண்ட போது, 11ஆம் திகதியுடன் அவர் பணிக்கு வரவில்லை என பதில் வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

முறைப்பாடு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் ஊடாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றிரவுவரை (15) எந்த தகவலும் கிடைக்கவில்லை என அக்கராயன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும் பொலிஸார் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை அறிவிக்கப்பட்டுள்ளது என்று மட்டும் தெரிவிக்கின்றனர் என குடும்பத்தலைவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Previous Post

இரா. சம்பந்தன் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் மனம் விட்டுப் பேச வேண்டும்

Next Post

இனப்பிரச்சினை விவகாரத்தில், சர்வதேச நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை

Next Post

இனப்பிரச்சினை விவகாரத்தில், சர்வதேச நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures