Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அட்டன் ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

April 13, 2018
in News, Politics, World
0

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தோட்டம் டிக்கோயா பிரிவில் 12.04.2018 அன்று இரவு காணாமல்போன 48 வயதுடைய ஒருவர் 13.04.2018 அன்று மதியம் அட்டன் ஆற்றிருக்கு அருகாமையில் உள்ள கால்வாயிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சடலம் டிக்கோயா தோட்டம் டிக்கோயா பிரிவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ராமசாமி சிவாநாதன் வயது 48 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கால்வாயில் சடலமொன்று இருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு விரைந்த அட்டன் பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

அட்டன் நகரப்பகுதிக்கு 12.04.2018 அன்று இரவு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் 13.04.2018 அன்று காலை வரை வராதமையினால் உறவினர்களும், பிரதேவாசிகளும் தேடியுள்ளனர். இதனையடுத்து இவர் இவ்வாறு கால்வாயிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது கொலையா தற்கொலையா என பலகோணங்களில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

ஐ.நா.வுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக ஏ.எல்.ஏ. அஸீஸ் நியமனம்

Next Post

தமிழர்களின் வரலாற்று இடத்தில் வெளிநாட்டவர்கள் செய்த காரியம்!

Next Post

தமிழர்களின் வரலாற்று இடத்தில் வெளிநாட்டவர்கள் செய்த காரியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures