பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் ஆதரவு வழங்குவதா? எதிர்ப்பதா? என தீர்மானம் எடுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழுக் கூட்டமொன்று எதிர்வரும் 2 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகினால் நல்லிணக்க அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும், இதனைத் தீர்மானிக்க பிரதமருக்கு இன்றும் (31) நாளையும் (01) அவகாசம் இருப்பதாகவும் ஸ்ரீ ல.சு.க.யின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் யாபா மேலும் குறிப்பிட்டார்.