Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வெளிநாட்டினரை திருமணம் செய்ய புதிய விதிகள்

March 19, 2018
in News, Politics, World
0

சௌதி அரேபியா குடி மக்கள் வெளிநாட்டினரை மணந்துக் கொள்ள பல புதிய விதிகளை சௌதி அரசு அறிவித்துள்ளது.

சௌதி அரேபிய ஆண்களும் பெண்களும் வெளிநாட்டினரை திருமணம் செய்துக் கொள்வது நெடுங்காலமாக உள்ளது. இதற்கு வரதட்சனை, திருமணத்துக்கான செலவுகள், வருமானம் குறைவாக உள்ளது போன்ற காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு திருமணம் செய்துக் கொள்ள சௌதி அரேபிய அரசு பல சட்ட விதிகளை அமுல் படுத்தி இருந்தது.தற்போது அந்த விதிகளில் பல திருத்தங்களை செய்து அரசு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரங்கள் பின் வருமாறு :

புதிய விதிகளின் படி மணமக்களுக்கு இடையே அதிகபட்சமாக 15 வருட இடைவெளி மட்டுமே இருக்க வேண்டும். இதற்கு முன்பு 30 வருட இடைவெளி அனுமதிக்கப்பட்டிருந்தது. அத்துடன் வெளிநாட்டினரை மணம் செய்ய விரும்பும் சௌதி அரேபிய பெண் 50 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். முந்தைய விதியின் படி 55 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். வெளிநாட்டினரை மணம் புரிய எண்ணும் சௌதி ஆண்கள் 40 முதல் 65 வயதுக்குள்ளும் சௌதி பெண்கள் 30 முதல் 50 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

திருமணம் செய்துக் கொள்ளும் சௌதி ஆண் தங்களின் வெளிநாட்டு மனைவிக்கு மாதம் 3000 சௌதி ரியாலை வழங்கும் அளவுக்கும், அந்தப் பெண் வசிக்க ஒரு தனி வீடு அல்லது ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு வழங்கும் அளவுக்கு வசதி பெற்றிருக்க வேண்டும். எந்த ஒரு கொடிய நோயும் தனக்கு இல்லை என சான்றிதழ் வழங்க வேண்டும். நாட்டின் ராணுவத்தில் எந்த ஒரு பதவியிலும் இருக்கக் கூடாது. மேலும் தன்னை திருமணம் செய்துக் கொண்டதால் தனது மனவிக்கு குடியுரிமை கோரி விண்ணப்பிக்கக் கூடாது.வெளிநாட்டினரை திருமணம் செய்துக் கொள்ளும் சௌதி பெண்கள் தங்கள் கணவருக்கும் குழந்தைகளுக்கு சௌதி குடியுரிமை திருமண பந்தத்தினால் கோர மாட்டோம் என உறுதி அளிக்க வேண்டும். பெண்களுக்கும் எந்த ஒரு கொடிய நோயும் இல்லை என சான்றிதழ் வழங்க வேண்டும்.

இது போன்ற விதிகள் புதிதாக விதிக்கப்பட்டுள்ளன.

Previous Post

பாகிஸ்தானி கணவரிடமிருந்து சீன மனைவியை பிரிக்கும் சீனா!

Next Post

மீண்டும் அதிபரானார் புதின்! தேர்தலில் முறைகேடு என எதிர்க்கட்சிகள் புகார்!

Next Post

மீண்டும் அதிபரானார் புதின்! தேர்தலில் முறைகேடு என எதிர்க்கட்சிகள் புகார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures