Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் ஆட முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

March 16, 2018
in News, Politics, World
0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில், மத்திய அரசு சொல்லும் எல்லாவற்றுக்கும் எங்களால் ஆட முடியாது என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக தெரிவித்துள்ளார்.

உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தாமதப்படுத்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக நேற்று சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், மத்திய அரசின் பினாமி அரசு என்று அழைக்கப்பட்டு வந்த அதிமுக அரசு, சமீப காலமாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக பேசி வருகிறது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் நேற்றைய சிறப்பு தீர்மானம் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், மத்திய அரசு சொல்லும் எல்லாவற்றுக்கும் எங்களால் ஆட முடியாது. எங்கள் கட்சிக்கென கொள்கைகளும் லட்சியங்களும் உள்ளன. காவிரி விஷயத்தில் ஜெ.வின் கொள்கைகளை பின்பற்று வோம்… அதிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட சட்டரீதியாகவும், அதிகளவில் போராட்டங்களை யும் முன்னெடுத்தது அதிமுக. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீருவோம். அதனை அமைக்காமல் ஓயப்போவதில்லை. காவிரி ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்க போராடுவோம்” என்றும் மாநில உரிமை களைக் காப்போம் என்றும் கூறினார்.மேலும், பட்ஜெட் குறித்த கேள்விக்கு, ”விவசாயிகள், நெசவாளர்கள், பின்தங்கியவர்கள், மிகவும் பின்தங்கியவர்கள், பழங்குடியினர், சீர்மரபினர் என அனைத்து தரப்பட்ட மக்களையும் கைதூக்கிவிடும் வகையில் தமிழக அரசின் பட்ஜெட்டில் 77,000 கோடி ரூபாய்க்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் சமூக நீதி பேணப்படுகிறது என்று கூறினார்.

மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கருத்துதெரிவித்தவர், தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளிப்பது குறித்து, கட்சித் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Previous Post

முன்கூட்டியே மக்களவை தேர்தல் : மாயாவதி

Next Post

ரூ.45000 கடன்! பட்ஜெட் குறித்து கமல் கருத்து

Next Post

ரூ.45000 கடன்! பட்ஜெட் குறித்து கமல் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures