Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி

March 15, 2018
in News, Politics, World
0

இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (14) நடைபெற்ற ரி.20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.

தனது இறுதி லீக் போட்டியில் பங்களாதேஷ் அணியை 17 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இந்திய அணி சுதந்திரக் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் விளையாடும் முதல் அணியாக தன்னை உறுதிசெய்தது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இந்நிலையில் 177 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது.

புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் இந்திய அணி 6 புள்ளிகளுடன் முதலாவது அணியாகவும் 3 இலங்கை அணி 2 புள்ளிகளுடன் 2 ஆவது அணியாகவும் பங்களாதேஷ் அணி 3 ஆவது அணியாகவும் உள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை மற்றும் பங்களாஷே் ஆகிய அணிகளுக்கிடையில் முக்கிய போட்டி இடம்பெறவுள்ளது.

Previous Post

நம்பிக்கையில்லாப் பிரேரணையை நல்ல நேரம் பார்த்து கொண்டுவருவோம்

Next Post

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம்

Next Post

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures