காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரிலிருந்து சனிக்கிழமை இரவு காணாமல் போயிருந்த வர்த்தகர் நேற்றுமாலை மாலை மட்டக்களப்பு கல்லடி வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார் என்று காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரபலமான பாதணிகள் உற்பத்தி நிறுவனங்களின் வர்த்தகரான ஏ.எல்.எம். முஹம்மது முபாறக் (வயது-35) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இரண்டு குழந்தைகளின் தந்தையான இவர் வழமைபோன்று சனிக்கிழமை இரவு தனது மஞ்சந்தொடுவாயிலுள்ள தொழிற்சாலையிலிந்து வெளியேறி அருகிலிருந்த உணவகத்தில் தேநீர் அருந்தி விட்டு வெளியேறியிருந்தார் என்றும், அதன் பின்னர் அவர் வீடு வரவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.