Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சியில் அடித்துக்கொல்லப்பட்ட அமெரிக்க நபர்

March 7, 2018
in News, Politics, Uncategorized, World
0

அமெரிக்க தமிழ் பிரஜையொருவர் கிளிநொச்சியில் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சியின் கனகபுரம் – செல்வாநகரை பிறப்பிடமாகக் கொண்ட இரத்தினம் துரைசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி கொலை செய்யப்பட்ட நபர் அமெரிக்க பிரஜாவுரிமை பெற்றவர் எனவும் அவரது பிள்ளைகள் கனடாவில் வாழ்வதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் அவரது காணியில் அமைந்துள்ள வீட்டினைப் பார்வையிட வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சில தினங்களுக்கு முன்னர் வந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஆரையம்பதியில் வெடிபொருட்கள் மீட்பு

Next Post

கண்டி மாவட்டத்தில் பதற்ற நிலமை தொடர்ந்தும் நீடிப்பு

Next Post
கண்டி மாவட்டத்தில் பதற்ற நிலமை தொடர்ந்தும் நீடிப்பு

கண்டி மாவட்டத்தில் பதற்ற நிலமை தொடர்ந்தும் நீடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures