Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காங்கேசன்துறை, துறை முகத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் கப்பல் சேவை

March 6, 2018
in News, Politics, Uncategorized, World
0

காங்கேசன்துறை, துறை முகத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் கப்பல் சேவைகளை ஆரம்பித்து வர்த்தக நடவடிக்கையை மேற்கொண்டால் வடக்கு மாகாணத்தின் பொருளாதராத்தில் பெரும் முன்னேற்றத்தை அடைய முடியும். இவ்வாறு யாழ்.வணிகர் கழகத்தின் முன்னாள் தலைவரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான ஜெயசேகரம் தெரிவித்தார்.

யாழ்ப்பணத்தில் கடமையாற்றிய இந்திய கொன்சியூலர் நடராஜனுக்கு முஸ்லிம் சமூகம் சார்பில் யாழ்ப்பாணத்திலுள்ள விடுதியொன்றில் கௌரவிப்பு நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இந்த நிகழவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது,

வடக்கு மாகாணத்தில் காங்கேசன்துறை துறைமுகம் நீண்டகாலமாக சீரமைக்கப்படாது காணப்படுகின்றது. அதனை மறு சீரமைப்புச் செய்ய இந்தியா முன்வந்துள்ளது. துறைமுகத்தை அபிவிருத்தி செய்து இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு இந்தியா – காங்கேசன்துறை இடையில் பொருட்கள் பரிமாற்றம் செய்யப்படல் அதிக வருமானத்தை மாகாணம் பெருக்கிக் கொள்ளும்.

பொதுவாக இங்குள்ள உள்ள வர்த்தகர்கள் கொழும்பு துறைமுகத்திலிருந்தே பொருட்களை இறக்குமதி செய்து வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு அதிக செலவீனம் ஏற்படுகின்றது. முன்னைய காலத்தில் இந்தியாவின் பொருட்கள் அதிகமாக சந்தையில் கிடைத்தன. இப்போது அவை வெகுவாக குறைந்து வேறு நாடுகளின் பொருட்களே இங்கு வருகின்றன. முன்பு இந்தியாவின் வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது வேறு நாட்டு வாகனங்கள் தாக்கம் செலுத்தி வருகின்றன.காங்கேசன்துறை துறைமுகமூடாக இந்தியாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் அது துறைமுக அபிவிருத்தி ஏற்படுவதுடன் பலருக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். அதனூடாக வடக்கு மாகாணத்துக்கு அதிக வருமானம் கிடைக்கும்.

அத்துடன் வடக்கிலிருந்து நாளாந்தம் நூற்றுக்கு அதிகாமனவர்கள் இந்தியா செல்ல அனுமதி கேட்டு துணைத் தூதரகத்துக்கு செல்வதை அவதானிக்க முடிகிறது. இந்தியா செல்பவர்கள் இங்கிருந்து கொழும்பு சென்றே செல்ல வேண்டியுள்ளது. இதனால் நேர அலைச்சல், அதிக செலவீனம் ஏற்படுகின்றது.

வடக்கு மாகாண மக்கள் இந்தியாவுக்கு இலகுவாகப் பயணிக்க பலாலி வானூர்தி நிலையத்தை அபிவிருத்தி செய்து இந்தியாவுக்குமான வானூர்தி சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Previous Post

சமூக இணையத்தளங்களில் மக்களைத் தவறாக வழிநடாத்தக் கூடிய பொய்யான தகவல்கள்

Next Post

தெல்தெனிய வன்முறையில் நேற்று ஒருவர் சாவு

Next Post

தெல்தெனிய வன்முறையில் நேற்று ஒருவர் சாவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures