அத்தியாவசிய திருத்த வேலைகளை முன்னிட்டு நாளை (28) காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
களனி, வத்தளை, பியகம, மஹர, ஜா-எல, பேலியகொட, கம்பஹா, தொம்பே, கட்டுநாயக்க மற்றும் சீதுவை ஆகிய பிரதேசங்களுக்கே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.