Monday, September 8, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எந்திரத் துப்பாக்கிக்கு தடை விதிக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி டிரம்ப்

February 22, 2018
in News, Politics, Uncategorized, World
0

அமெரிக்காவில் எந்திரத் துப்பாக்கிக்கு தடை விதிக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டு உள்ளார்.

அமெரிக்க நாட்டில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. குறிப்பாக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் அதிக அளவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

கடந்த 14–ம் தேதி புளோரிடா மாகாணம், பார்க்லேண்ட் நகரில் உள்ள மெர்ஜாரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 பேர் பலியானது, அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இதையடுத்து துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என்று பலரும் வலியுறுத்த ஆரம்பித்தனர்.

பார்க்லேண்ட் நகர் பள்ளிக்கூட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 பேரை பலி கொண்ட ரக துப்பாக்கிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. ஆனால் இந்த கோரிக்கையை மாகாண சட்டசபை ஏற்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில், பார்க்லேண்ட் நகர் பள்ளிக்கூட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிர் தப்பிய மாணவர்கள், புளோரிடா மாகாணத்தின் தலைநகரான டலஹாசியில் மாகாண சட்டசபை முன் நேற்று போராட்டம் நடத்தினார்கள். சட்டசபை உறுப்பினர்களையும் சந்தித்து பேசினார்கள்.

இந்த நிலையில், ஒரே நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ரவுண்டுகள் சுட்டுத்தள்ள துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் ‘பம்ப்ஸ்டாக்’ என்ற உபகரணத்துக்கு தடை விதிக்க அதிபர் டிரம்ப் க முடிவெடுத்துள்ளார்.

பாதி தானியங்கி துப்பாக்கிகளில் (செமி ஆட்டோமேட்டிக் ரைபிள்ஸ்) ‘பம்ப்ஸ்டாக்’ பொருத்தி விட்டால், அது எந்திர துப்பாக்கியாக மாறிவிடும்.
இந்த ‘பம்ப்ஸ்டாக்’ சட்ட விரோதமானது என அறிவித்து சட்டம் இயற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுமாறு சட்டத்துறைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அதிபர் டிரம்ப், ‘‘புளித்துப்போன வெற்று பேச்சுகள், அலுப்பூட்டும் வாதங்களைக் கடந்து தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும். நம் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பயன்தரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த ‘பம்ப்ஸ்டாக்’ தான் அங்கு லாஸ்வேகாஸ் இசை விழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் பொருத்தப்பட்டு இருந்தது.

இந்த ‘பம்ப்ஸ்டாக்’கை வெறும் 100 டாலருக்கு (சுமார் ரூ.6,500) எளிதாக வாங்கும் நிலை உள்ளது.

தற்போது இந்த ‘பம்ப்ஸ்டாக்’ மீது தடை விதிப்பது என்பது எந்திர துப்பாக்கிக்கு தடை விதிப்பதாகவே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

எல்லை தாண்டி பறந்த பாகிஸ்தான் இராணுவ கெலிகாப்டர்

Next Post

காலிஸ்தான் இயக்கத்துக்கு ஆதரவு இல்லை : ஜஸ்ரின் ரூடே

Next Post

காலிஸ்தான் இயக்கத்துக்கு ஆதரவு இல்லை : ஜஸ்ரின் ரூடே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures