Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பக்கோடா கடை வைக்க பிரதமர் உதவி தேவையில்லை

February 7, 2018
in News, Politics, World
0

குடிநீரை உறிஞ்சி எடுத்து சூரிய ஒளி மின்சாரத் தகடுகளைச் சுத்தம் செய்யும் தனியார்மீது அரசு நடவடிக்கை தேவை என கமுதியில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

கமுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்த தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ”கமுதி அருகே செங்கப்படையில் செயல்பட்டு வரும் அதானி சூரிய ஒளி மின் தயாரிப்பு நிறுவனம் தினசரி சோலார் தகடுகளைச் சுத்தம் செய்வதற்காகக் குடிநீரைப் பயன்படுத்தி வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு நிலவும் இப்பகுதியில் இது குடிநீரை உறிஞ்சி எடுத்து பயன்படுத்துவது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்.

பக்கோடா, டீ கடை வைப்பது தவறு இல்லை. இன்ஜினீயரிங் படித்து விட்டு அந்த வேலை பார்ப்பது என்பதும் அதற்கு பிரதமர் உதவி என்பதும் தேவையில்லை. பஸ் கட்டண உயர்வுக்கு மாவட்டத் தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். நெல்லை மாவட்டத்தில் கறுப்புக்கொடி காட்டிய காங்கிரஸ் கட்சியினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறினார்.

Previous Post

மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்தால் தூண்களுக்கு சிறிதளவே சிராய்ப்பு

Next Post

தமிழகத்திலும் கூகுள் மையம் அமையுங்கள்

Next Post

தமிழகத்திலும் கூகுள் மையம் அமையுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures