Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உத்தரப்பிரதேசத்தில் போலீஸ் என்கவுன்ட்டர்: ஒருவர் காயம்!

February 4, 2018
in News, Politics, Uncategorized, World
0

உத்தரப் பிரதேச மாநிலம் சிதாபூர் பகுதியில், சமூக விரோதிகளுக்கும் போலீஸுக்கும் இடையில் நடந்த என்கவுன்ட்டரில், ஒருவர் காயமடைந்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், சிதாபூர் பகுதியில் போலீஸ் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கு வந்த மூன்று பேர் திடீரென்று போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளனர். சற்றும் எதிர்பாராத விதத்தில் துப்பாக்கிசூடு நடந்த போதும், போலீஸார் தங்களை தாக்கியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தின் போது, போலீஸார் மீது துப்பாக்கிசூடு நடத்திய சமூக விரோதிகளில் ஒருவர் போலீஸாரின் எதிர்வினையால் காயமடைந்தார். மீதமிருந்த இருவர் தப்பியோடினர். காயமடைந்து பிடிபட்ட நபரின் பெயர் ரோஹித் சிங் என்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர் முன்னரே காவல்துறையால் தேடப்பட்ட குற்றவாளி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Previous Post

முதலீட்டாளர் மாநாடு பணிகளில் தாமதம் ஏன்?

Next Post

ராணுவ வீரர்களை நேரில் சென்று சந்தித்த நிர்மலா சீதாராமன்!

Next Post

ராணுவ வீரர்களை நேரில் சென்று சந்தித்த நிர்மலா சீதாராமன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures