Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேஜாஸ் போர் விமானத்தில் பறந்த அமெரிக்க தளபதி

February 4, 2018
in News, Politics, World
0

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, தேஜாஸ் போர் விமானத்தில், அமெரிக்க விமானப் படை தளபதி, டேவிட் கோல்ட்பீன் பயணித்தார்.

அரசு முறை பயணம்அமெரிக்க விமானப் படை தளபதி, டேவிட் கோல்ட்பீன், அரசு முறை பயணமாக, இந்தியா வந்துள்ளார். அவருடன், விமானப் படை மூத்த அதிகாரி, டெரன்ஸ் ஓஷாக்னெஸி உள்ளிட்டோர் வந்துள்ளனர். இந்திய விமானப் படையுடனான நல்லுறவை பலப்படுத்தும் நோக்கில், அமெரிக்க விமானப் படை அதிகாரிகள் வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க விமானப் படை தளபதியும், பிற அதிகாரிகளும், ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூருக்கு நேற்று சென்றனர். அங்கு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, தேஜாஸ் இலகுரக போர் விமானத்தில், டேவிட் கோல்ட்பீன் மற்றும் பிற அமெரிக்க அதிகாரிகள் பயணித்தனர்.இதன் மூலம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானத்தில் பறந்த முதல், வெளிநாட்டு விமானப் படை தளபதி என்ற பெருமையை, டேவிட் கோல்ட்பீன்பெற்றுள்ளார்.

இந்திய பயணம் குறித்து, டேவிட் கோல்ட்பீன், ‘டுவிட்டரில்’ வெளியிட்ட பதிவில், ‘இந்திய விமானப் படை அளித்த சிறப்பான வரவேற்பு, மகிழ்ச்சியை அளிக்கிறது. ‘இரு நாடுகளின் விமானப் படைகள் இடையிலான உறவு, மேலும் சிறக்க வேண்டும் என்பதில், ஆர்வமாக உள்ளோம்’ என, குறிப்பிட்டு உள்ளார்.

Previous Post

சிறையில் உள்ள லாலுவுக்கு ஜாமீன் மறுப்பு

Next Post

முதலீட்டாளர் மாநாடு பணிகளில் தாமதம் ஏன்?

Next Post

முதலீட்டாளர் மாநாடு பணிகளில் தாமதம் ஏன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures