Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருடர்களை பிடிப்பதற்கு, ரணிலே தடை – அஸாத் சாலி

January 24, 2018
in News, Politics, World
0

திரு­டர்­க­ளுக்கும் மோச­டி­க்கா­ரர்­க­ளுக் கும் எதி­ராக நடவ­டிக்கை எடுப்­பதில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தடை­யாக இருக்­கின்றார். அத­னால்தான் ஜனா­தி­பதி குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்க ஒத்­து­ழைக்­கு­மாறு கேட்­கின்றார் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத் சாலி தெரி­வித்தார்.

தேசிய ஐக்­கிய முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

நல்­லாட்சி அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வரும்­போது மக்­க­ளுக்கு பல வாக்­கு­று­தி­களை அளித்­தி­ருந்­தது. அதில் முக்­கி­ய­மாக கடந்த அர­சாங்க காலத்தில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்­தது. ஆனால் அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வந்து 3வரு­டங்கள் கடந்தும் கடந்த காலத்தில் ஊழல் மோச­டி­களில் தொடர்பு பட்­ட­வர்கள் என பகி­ரங்­க­மாக தெரி­விக்­கப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக இது­வரை எந்த சட்ட நட­வ­டிக்­கை­யையும் எடுக்க தவ­றி­யுள்­ளது.

அத்­துடன் அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்னர் பல மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. குறிப்­பாக இரட்டை கட­வுச்­சீட்டு விவ­கா­ரத்தில் விமல் வீர­வன்ச கைது­செய்­யப்­பட்­ட­போது, பிர­த­மரின் தலை­யீட்டால் அவர் விடு­விக்­கப்­பட்டார். அதே­போன்று ஐக்­கிய தேசிய கட்­சி­யினர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக கட்சி தலை­மை­ய­கத்தில் வைத்து எதிர்ப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­ட­போது மஹிந்த ராஜபக் ஷ அவரை பாது­காத்தார். அதற்கு பிரதி உப­கா­ர­மா­கவே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ராஜபக் ஷ குடும்­பத்­துக்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­காமல் பாது­காத்து வரு­கின்றார்.

பிர­த­மரின் இந்த நட­வ­டிக்­கை­யி­னாலே கடந்த அர­சாங்க காலத்தில் ஊழல் மோச­டி­களில் தொடர்பு பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க முடி­யாமல் போயுள்­ளது. இதனால் அர­சாங்­கத்தின் மீது மக்­க­ளுக்கு விரக்தி ஏற்­பட்­டுள்­ளது. அத்­துடன் ஊழல் மோச­டி­களை துடைத்­தெ­றி­வ­தாக தெரி­வித்து ஆட்­சிக்கு வந்து சில மாதங்­க­ளிலே மத்­திய வங்­கியில் மோசடி இடம்­பெ­ற்றுள்ளது. இதுவும் அர­சாங்­கத்­துக்கு அவப்­பெ­யரை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் குற்­ற­வா­ளி­களை பாது­காக்கும் வகையில் பிர­தமர் செயற்­ப­டு­வ­தா­கவும் பகி­ரங்­க­மாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை கருத்­திற்­கொண்டே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஊழல்­வா­தி­க­ளுக்கு எதிராக சட்ட ரீதியில் தண்டனை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். எனவே ஜனாதிபதியின் இந்த கோரிக்கையானது திருடர்களை பிரதமர் பாதுகாக்கின்றாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

Previous Post

பாராளுமன்றத்தில் தேம்பியழுத பவானி, அமைச்சரும் கண்கலங்கினார்

Next Post

யானையை கொன்று தீயிட்டு எரித்­த­வர் கைது

Next Post

யானையை கொன்று தீயிட்டு எரித்­த­வர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures