கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த புகையிரதம் வழிமறிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் வைத்து பொது மக்களால் இந்த புகையிரதம் வழிமறிக்கப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த புகையிரதமானது சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் வழி மறிக்கப்பட்டுள்ளது.
ஓமந்தை – விளாத்திக்குளம் கிராமத்திற்கான பாதையை மறித்து புகையிரத பாதை அமைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த புகையிரதம் மக்களால் வழிமறித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கடந்த ஏழு வருடங்களாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.
இருந்த போதும் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையிலேயே இவ்வாறானதொரு நடவடிக்கையை தாம் எடுத்துள்ளதாக புகையிரதத்தை வழிமறித்துள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் புகையிரத பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அப்பகுதியில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.