Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லசந்த கொலையில் புதிய தகவல்கள் : அம்பலம்

January 19, 2018
in News, Politics, Uncategorized, World
0
லசந்த கொலையில் புதிய தகவல்கள் : அம்பலம்

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை இடம்பெற்ற பின் அதை விசாரித்து வந்த கல்கிஸ்ஸை பொலிஸாரும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரும் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக அன்றி, சாட்சியங்களை அடையாளம் கண்டு அழிக்கவே விசாரணைகளை நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

லசந்த விக்­ர­ம­துங்­க படுகொலை செய்யப்பட்ட 2009 ஜனவரி 9ஆம் திகதிக்கு முதல் நாள், அவரது அலுவலகத்தை மருதானை திரிப்போலி இராணுவ புலனாய்வு முகாமைச் சேர்ந்த இராணுவ புலனாய்வாளர்கள் சிலர் கண்காணித்துள்ளதாக புலனாய்வுப் பொலிஸார் நேற்று (18) நீதிமன்றில் தகவல் வழங்கியுள்ளனர்.

தாம் இதுவரை முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இது உறுதியாகியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர்.

அத்துடன் லசந்தவை கொலை செய்ததாக கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட முன்னாள் புலனாய்வுத் துறை உறுப்பினர் ஜயமான்ன, சம்பவம் இடம்பெற்ற திகதியில் கொழும்பிலேயே இருக்கவில்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு எதிர்வரும் மார்ச் 15 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவு

Next Post

வேட்பு மனு நிராகரிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று

Next Post
வேட்பு மனு நிராகரிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று

வேட்பு மனு நிராகரிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures