Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2017ல் 1 கோடி பேரை வரவேற்ற இந்தியா

January 17, 2018
in News, Politics, Uncategorized, World
0
2017ல் 1 கோடி பேரை வரவேற்ற இந்தியா

2017ம் ஆண்டில், இந்தியாவிற்கு 1 கோடி வெளிநாட்டவர்கள் சுற்றுலா பயணிகளாக வந்திருப்பதாகவும், அவர்களின் மூலம் 27 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயாக கிடைத்திருப்பதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் கூறியதாவது, இந்தியா அனைவரும் விரும்பும் நாடாக விளங்குகிறது. இதற்கு கடந்த ஆண்டில், சுற்றுலா பயணிகளாக வெளிநாட்டவர்கள் 1 கோடி பேர் வந்துள்ளதே இதற்கு சான்று. சுற்றுலாத்துறை சிறந்து செயல்படுதாலேயே, பெரும்பாலான வெளிநாட்டவர்களை கவரமுடிகிறது. இத்துறையில் மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை புகுத்தி இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அனைவருக்கும் அனைத்து வசதிகள் என்ற கோட்பாட்டின்படி, நாம் செயல்பட்டு, அனைவருக்கும் தேவையான வசதிகளை வழங்கிவருகிறோம்.

ஜி.டி.பி.யில் பங்களிப்பு :

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.,)யில். சுற்றுலாத்துறையின் பங்கு 6.88 சதவீதமாக உள்ளது. மேலும், கடந்த 2017ம் ஆண்டில், நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளில், சுற்றுலாத்துறை மட்டும் 12 சதவீத பணிவாய்ப்புகளை வழங்கியுள்ளதை யாரும் மறுக்க இயலாது.

பட்டியலில் முன்னேற்றம் :

வெளிநாட்டவர்கள விரும்பும் நாடுகளின் பட்டியலில் 2013ம் ஆண்டில் 65வது இடத்தில் இருந்த இந்தியா, மோடி தலைமையிலான மத்திய அரசின் சீரிய நடவடிக்கைகளால், வெளிநாட்டவர்களின் அபிமானங்களை பெற்று தற்போது (2017) 40 இடங்கள் முன்னேறி 25வது இடத்தில் உள்ளது.
சுவதேஷ் தர்சன் திட்டத்தின் மூலம், சுற்றுலாத்துறையில் பல்வேறு சீரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2017-18ம் நிதியாண்டில் இத்துறையில் 11 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
பெண்கள் போலோ அறிமுகம் :

வெளிநாட்டு பயணிகளை மேலும் கவரும்பொருட்டு. மேலைநாடுகளில் பிரபலமாக உள்ள போலோ விளையாட்டை, இந்தியாவிலும் அறிமுகப்படுத்த உள்ளோம். சர்வதேச போலோ போட்டிகளில், மணிப்பூர் பெண்கள் போலோ அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்தியாவிலும், பெண்கள் போலோ போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அல்போன்ஸ் கூறினார்.

Previous Post

திருப்பூர் மாணவரைக் கொன்ற இன்சுலின்!

Next Post

அறை முழுக்க கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள்!

Next Post
அறை முழுக்க கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள்!

அறை முழுக்க கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures