Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்ற தொடரூந்தில் தீப்பரவல்!

January 15, 2018
in News, World
0

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த தொடரூந்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொழிநுட்ப கோளாறு காரணமாக குறித்த தீ விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நண்பகல் யாழ். மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்திற்கு முன்னர் குறித்த தொடரூந்து பயணித்த போது புகையிரதத்தின் பின்பகுதியில் உள்ள இயந்திர பெட்டியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து இன்று அதிகாலை 5.45 மணியளவில் யாழ். நோக்கி புறப்பட்ட அதிவேக சொகுசு தொடரூந்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

தீப்பரவலின் காரணமாக புகையிரதம் சடுதியாக நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, தீயணைப்புப் படையினர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு, தொழிநுட்ப கோளாறு சீராக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளியேற்றப்பட்ட பயணிகள் பேருந்துகளில் அவர்களது இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

திருட வந்த வீட்டில் அயர்ந்து உறங்கிய திருடன்!

Next Post

நாயினால் தண்டனைக்குள்ளான பெண்!!

Next Post

நாயினால் தண்டனைக்குள்ளான பெண்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures