Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சீனா பக்கம் இலங்கை போவதை, தடுக்க வேண்டும் – இந்திய இராணுவத் தளபதி

January 13, 2018
in News, Politics, World
0
சீனா பக்கம் இலங்கை போவதை, தடுக்க வேண்டும் – இந்திய இராணுவத் தளபதி

இலங்கை போன்ற நாடுகள் சீனாவின் பக்கமாக நகர்ந்து செல்ல இந்தியா விட்டுவிடக் கூடாது என இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இராணுவ தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“சீன-இந்திய எல்லைப் பகுதியில் சீனா பல அத்துமீறல்களைப் புரிந்தே வருகிறது. சீனா பலம் வாய்ந்த ஒரு நாடாக இருக்கலாம். ஆனால், இந்தியாவும் பலவீனமான நாடு அல்ல.

“பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினையில் இருந்து சீன எல்லைப் பிரச்சினை குறித்து இந்தியா தனது கவனத்தைத் திருப்ப வேண்டும். அயல் நாடுகள் சீனா நோக்கி நகர்வதை இந்தியா தடுக்க வேண்டும்.

“‘அயலவர்களுக்கு முதலிடம்’ என்ற கொள்கையை அமுல்படுத்தி இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், பூட்டான், மியன்மார் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைத் தன்பக்கம் வைத்துக்கொள்ள இந்தியா முயற்சிக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Previous Post

நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர், கட்டுநாயக்கவில் குடும்பத்தினருடன் தடுத்து வைப்பு

Next Post

மயில் வேட்பாளரின், வீட்டுக்கு கல்வீச்சு

Next Post

மயில் வேட்பாளரின், வீட்டுக்கு கல்வீச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures