Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரோஹிங்கிய முஸ்லிம்களை, திருமணம் முடிக்கத் தடை – மீறினால் 7 வருட சிறை

January 11, 2018
in News, Uncategorized, World
0

ரொஹிங்கிய முஸ்லிம்களை திருமணம் முடிக்க தடை விதிக்கும் சட்டத்தை பங்களாதேஷ் நீதிமன்றம் ஒன்று உறுதி செய்துள்ளது.

பங்களாதேஷ் நாட்டவர்கள் மற்றும் ரொஹிங்கியர்களுக்கு இடையிலான திருமணப் பதிவை தடுக்கும் சட்டம் 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. குடியுரிமை பெறுவதற்காகவே இவ்வாறான திருமணம் இடம்பெறுவதாக பங்களாதேஷ் அரசு குற்றம்சாட்டுகிறது.

2017இல் மியன்மாரில் இருந்து அரை மில்லியன் ரொஹிங்கியர்கள் பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றுள்ளனர். 18 வயது ரொஹிங்கிய பெண்ணை திருமணம் முடித்த 26 வயது நபர் ஒருவரை பொலிஸார் தேடி வரும் நிலையிலேயே அவரது தந்தை இந்த வழக்கை தொடுத்துள்ளார்.

ஷொஹைப் ஹொஸை ஜெவல் என்பவர் ரொஹிங்கிய பெண்ணை திருமணம் முடித்ததை அடுத்து கடந்த ஒக்டோபர் தொடக்கம் பொலிஸார் அவரை தேடிவருவதாக உள்ளூர் செய்திகள் குறிப்பிடுகின்றன.

ரொஹிங்கியர் ஒருவரை திருமணம் முடித்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிரான மனுவை நிராகரித்த டாக்கா உயர் நீதிமன்றம், சட்ட செலவுகளுக்காக 1.200 டொலர்களை செலுத்தும் படியும் உத்தரவிட்டுள்ளது.

Previous Post

ஈரானில் மாணவர்களுக்கு, ஆங்கிலம் கற்பிக்க தடை

Next Post

துப்பாக்கி முனையில் அல் ஜசீரா, அலுவலகத்தை மூடிய ஏமன் ராணுவம்

Next Post

துப்பாக்கி முனையில் அல் ஜசீரா, அலுவலகத்தை மூடிய ஏமன் ராணுவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures