Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் அகற்றப்படும் சட்டவிரோத கேபிள் இணைப்புகள்

January 10, 2018
in News, Politics
0

யாழ்ப்பாண மாவட்டத்தில் அனுமதிப்பத்தரமின்றி முன்னெடுக்கப்பட்ட கேபிள் இணைப்புகள் இன்று அதிகாலை முதல் அகற்றப்படுகின்றன.

கொழும்பிலிருந்து வருகை தந்த தொலைத்தொடர்பு ஆணைக்குழு அதிகாரிகளாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

அரசின் அனுமதிப் பத்திரமின்றி தொலைக்காட்சி அலைவரிசைகளின் கேபிள் இணைப்பை வழங்க முடியாது என தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
சட்டவிரோத கேபிள்கள் அனைத்தையும் டிசெம்பர் 31ஆம் திகதிக்குள் அகற்றுமாறும் அது கேட்டுக்கொண்டது. எனினும் அவை அகற்றப்படவில்லை.

இந்த நிலையில் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் வருகை தந்தனர். ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று சட்டவிரோத கேபிள் இணைப்புகளை அவர்கள் அறுத்து அகற்றினர்.

மேலும் சட்டவிரோதமாக கேபிள் இணைப்பை வழங்கியவர்களின் சேவை நிலையத்தை முற்றுகையிட்டு, அங்குள்ள தொழிநுட்ப சாதனங்களை அரசுடமையாக்கும் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் அஸ்க் (,ASK) மீடியா மட்டுமே அனுமதிபெற்ற கேபிள் சேவை வழங்குனர் என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Previous Post

கப்பலொன்றுடன் இலங்கை மீனவப் படகொன்று மோதியதில் இருவர் உயிரிழப்பு!

Next Post

நீண்ட நாடுகளுக்கு பிறகு ஒரே நாளில் மோதும் விக்ரம் மற்றும் சூர்யா.

Next Post

நீண்ட நாடுகளுக்கு பிறகு ஒரே நாளில் மோதும் விக்ரம் மற்றும் சூர்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures