Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புளூவேல் விளையாட்டால் உயிரிழப்பு ஏற்பட்டதாக ஆதாரம் இல்லை

January 4, 2018
in News, World
0
புளூவேல் விளையாட்டால் உயிரிழப்பு ஏற்பட்டதாக ஆதாரம் இல்லை

இந்தியாவில் கடந்த வருடம் நீலத் திமிங்கலம் எனப்படும் ‘புளூவேல்‘ விளையாட்டை விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 50 நாட்களை இலக்காக கொண்டே அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உத்தரவு பிறப்பிக்கப்படும். அந்த உத்தரவை நிறைவேற்றும் மாணவர்கள் அதனை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த விளையாட்டில், இரவு நேரத்தில் திகில் படங்களை பார்ப்பது, கையை அறுத்துக்கொள்வது, மொட்டை மாடியில் இருந்து குதிப்பது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இந்த விபரீதமான விளையாட்டுக்கு மாணவ–மாணவிகள் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவங்கள் செய்தியாகியது.

இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு ‘புளூவேல்‘ விளையாட்டுக்கு இந்தியாவில் தடை விதித்தது. ‘புளூவேல்’ விளையாட்டு தேச பிரச்சனையாகும், டிவி சேனல்கள் எச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டும் என இதுதொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அறிவுரையும் வழங்கியது.

இந்நிலையில் புளூவேல் விளையாட்டால் உயிரிழப்பு ஏற்பட்டதாக ஆதாரம் எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

மத்திய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் அஹிர் மக்களவையில் பேசுகையில், “பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புளூவேல் விளையாட்டில் ஈடுபட்ட குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வந்தது. இவ்விவகாரத்தை கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கேட்டுக் கொண்டோம். புளூவேல் விளையாட்டினால் குழந்தைகள் தற்கொலை செய்துக் கொண்டது மற்றும் தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பாக விசாரிக்க இந்திய கம்ப்யூட்டர் அவசரகால பதில் நடவடிக்கை குழு (சிஇஆர்டி-இன்) அமைக்கப்பட்டது.

இந்த குழு குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டுவதாக கூறப்படுவது பற்றி விரிவான ஆய்வு மேற்கொண்டது.

இன்டர்நெட் செயல்பாடு, மின்னணு உபகரணங்களின் செயல்பாடு, அனைத்து கால் பதிவுகள், சமூக வலைதள செயல்பாடு மற்றும் தடயவியல் ஆதாரங்களை குழுவானது ஆய்வு செய்தது, மீட்கப்பட்டவர்களிடமும் தகவல் பெற்றது. இருப்பினும் தற்கொலை சம்பவங்களில் அதற்கு புளூவேல் விளையாட்டு தான் காரணம் என்பதை உறுதி செய்ய முடியவில்லை,” என்றார்.

Previous Post

வட கொரியா- தென்கொரியா மீணடும் ஹாட்லைன் வசதி துவக்கம்

Next Post

ரஜினிகாந்த் அரசியல்: தமிழக அரசியலுக்கு ஆன்மிகம் மட்டும் போதாது- மலேசியா துணை முதல்வர்

Next Post

ரஜினிகாந்த் அரசியல்: தமிழக அரசியலுக்கு ஆன்மிகம் மட்டும் போதாது- மலேசியா துணை முதல்வர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures