Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழ் மேல் நீதிமன்றில் 41 பேருக்கு தூக்கு தண்டனை!

January 2, 2018
in News, Politics
0

யாழ் மேல் நீதிமன்றில் 3 இராணுவத்தினர் உட்பட 41பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 13 வருடங்களில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மேல் நீதிமன்றபுள்ளிவிபரத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

யாழ் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற கொலைச்சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ் மேல் நீதிமன்று யாழ் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பின்னர் இது வரைமேல் நீதிமன்ற நீதிபதிகளாக 9 நீதிபதிகள் கடமையாற்றியுள்ளனர்.

அந்த வகையில் கடந்த 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 ஆம் ஆண்டு வரை நீதிபதிகே.பி.எஸ்.வரதராஜா,

2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டு வரை நீதிபதிஎஸ்.தியாகேந்திரன்,

2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரை நீதிபதிபி.ஸ்வர்ணராஜா,

2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை நீதிபதிஆர்.ரி.விக்னராஜா,

2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரை நீதிபதி எஸ்.பரமராஜா,

2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரை நீதிபதிஜெ.விஸ்வானந்தன்,

2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை நீதிபதிஅ.பிறேம்சங்கர்,

2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 மே மாதம் வரை நீதிபதி திருமதிகே.சிவபாதசுந்தரம், ஆகியோர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளாககடமையாற்றியுள்ளதுடன், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் தொடக்கம் இன்று வரையாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மா.இளஞ்செழியன் கடமையாற்றி வருகிறார்.

மேற்குறிப்பட்ட நீதிபதிகளின் சேவைக்காலப் பகுதியிலேயே மேற்குறித்த 41 பேருக்குமரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 2005, 2008, 2010 ஆம் ஆண்டுகளில் தலா ஒருவருக்கும், 2012 ஆம்ஆண்டு 2 பேருக்கும், 2013 ஆம் ஆண்டு ஒருவருக்கும், 2014 ஆம் ஆண்டு 4பேருக்கும், 2015 ஆம் ஆண்டு 8 பேருக்கும், 2016 ஆம் ஆண்டு 11 பேருக்கும் 2017ஆம் ஆண்டு 12 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளன.

யாழ் மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற கொலைசம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதவான்நீதிமன்றங்கள் ஊடாக வழக்கு விசாரணைகளை இடம்பெற்று பின்னர் மேல் நீதிமன்றில்குறித்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அதில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்களுக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

வானில் தோன்றிய வித்தியாசமான சூரிய ஒளிவட்டம்

Next Post

ரெமோ வில்லனுக்கு மம்முட்டி படத்தில் வாய்ப்பு..!

Next Post

ரெமோ வில்லனுக்கு மம்முட்டி படத்தில் வாய்ப்பு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures