Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ரூ.1632 கோடி நிதியுதவியை நிறுத்த அமெரிக்கா முடிவு?

December 31, 2017
in News, Politics, World
0

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காததால் அந்நாட்டுக்கு வழங்கப்படும் ரூ.1,632 கோடி நிதியுதவியை நிறுத்திவைக்க அமெரிக்கா தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. பாகிஸ்தானில் லஷ்கர் இ தய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹக்கானி உள்ளிட்ட தீவிரவாத குழுக்கள் செயல்படுகின்றன.

இவற்றை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு அந்நாடு புகலிடமாக விளங்குவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இதை நிறுத்தி கொள்ளாவிட்டால் அந்நாட்டு ராணுவத்துக்கு வழங்கும் நிதியுதவி நிறுத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. நெருங்கிய நட்பு நாடுகளாக விளங்கிய அமெரிக்கா – பாகிஸ்தான் இடையே, தற்போது தீவிரவாதிகள் பிரச்னையால் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளாக கனடாவை சேர்ந்த அமெரிக்கர் குடும்பத்தினரை ஆப்கானிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்பு கடத்தி வைத்திருந்தது. அவர்கள் இந்தாண்டு ஆரம்பத்தில் விடுவிக்கப்பட்டனர். அவர்களை கடத்திய தீவிரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானில் இருக்கிறான்.

அவனை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது. இந்த பிரச்னையால் இருநாட்டு உறவில் சிக்கல் எழுந்தது.

இதேபோல், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழுக்கள் மீது அமெரிக்கா தன்னிச்சையாக ராணுவ நடவடிக்கை எடுத்தால், அதை ஏற்க முடியாது என்று பாகிஸ்தான் ராணுவம் கடந்த 28ம் தேதி எச்சரிக்கை விடுத்தது. இருநாடுகள் இடையிலான உறவை இது மேலும் பாதித்தது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடந்த 2002ம் ஆண்டு முதல் நிதியுதவி செய்து வருகிறது.

இதுவரை 33 பில்லியன் டாலர் பணத்தை அமெரிக்கா அந்த நாட்டுக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் – அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசு உள்ளூர் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.

எனவே அந்த குழுக்கள் மீது இனியும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்த நாட்டுக்கு வழங்கப்படும் ரூ.1,632 கோடி நிதியுதவியை நிறுத்திவைப்பது பற்றி அமெரிக்க அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

இது குறித்து இந்த மாத தொடக்கத்தில் ஆலோசனை நடத்திய அமெரிக்க அதிகாரிகள் இது தொடர்பான இறுதி முடிவு அடுத்த வாரத்தில் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Previous Post

192 பேருக்கு விசா மறுப்பு

Next Post

யாழில் அரச அதிகாரிகளின் திருவிளையாடல்!

Next Post
யாழில் அரச அதிகாரிகளின் திருவிளையாடல்!

யாழில் அரச அதிகாரிகளின் திருவிளையாடல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures