Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தங்கையின் காதலன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாணவன் பலியான பரிதாபம்!

December 27, 2017
in News, Politics
0
தங்கையின் காதலன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாணவன் பலியான பரிதாபம்!

தங்கையை காதலித்த நபர் மீது ஒருவர் நடத்திய தாக்குதல் குறி தவறி 14 வயதான பாடசாலை மாணவன் ஒருவரை பலி வாங்கிய சம்பவமொன்று கட்டான பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கட்டான கிழக்கு களுவரிப்புவ என்னும் இடத்தைச் சேர்ந்த 14 வயதான தினயதுராகே சந்திம என்ற பாடசாலை மாணவனே சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கட்டான கிழக்கு களுவரிப்புவ பகுதியைச் சேர்ந்த 19 வயதான கஹட்டகெதர கனிஸ்க சிறிசேன என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நத்தார் பண்டிகையன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபரின் சகோதரியுடன் கட்டான பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் காதல் உறவை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

இந்த காதல் விவகாரத்திற்கு கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாளும் இந்த இருவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 25ம் திகதி சகோதரியுடன் காதல் தொடர்பைப் பேணிய நபரும், உயிரிழந்த நபரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதன் போது சந்தேக நபர் கல் ஒன்றை எடுத்து மோட்டார் சைக்கிளில் சென்ற தங்கையின் காதலன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

எனினும் இந்த தாக்குதல் குறி தவறி மோட்டார் சைக்கிளை செலுத்திய 14 வயது பாடசாலை மாணவன் மீது பட்டு சம்பவ இடத்திலேயே குறித்த பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளான்.

மோட்டார் சைக்கிளில் சென்ற தங்கையின் காதலரையும் சந்தேக நபர் கடுமையாக தாக்கியுள்ளார் அவரும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கையை பாதுகாக்க ஜப்பான் உதவி!

Next Post

பெரியபாண்டியனை தவறுதலாக சுட்டது காவலர் முனிசேகர் தான் :காவல்துறை

Next Post
பெரியபாண்டியனை  தவறுதலாக சுட்டது காவலர் முனிசேகர் தான் :காவல்துறை

பெரியபாண்டியனை தவறுதலாக சுட்டது காவலர் முனிசேகர் தான் :காவல்துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures