Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பணத்தை மிச்சப்படுத்த அரசு போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்

December 26, 2017
in News, Politics, World
0
பணத்தை மிச்சப்படுத்த அரசு போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்

பணத்தை மிச்சப்படுத்தும் விதமாக, பொதுமக்கள் அரசு போக்குவரத்துகளை பயன்படுத்த வேண்டும்’’ என பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கினார்.

டெல்லியில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 3ம் கட்ட விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் தெற்கு டெல்லியின் கல்காஜி மந்திர் முதல் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவின் தாவரவியல் பூங்கா நிலையம் வரையிலான 12.64 கிமீ நீளமுள்ள மெஜந்தா வழித்தட பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளான நேற்று, இந்த வழித்தடத்தில் பிரதமர் மோடி ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இந்த விழா நொய்டாவில் நடந்தது. பின்னர், தாவரவியல் பூங்கா நிலையத்தில் ஓக்லா பறவைகள் சரணாலய ரயில் நிலையம் வரை ரயிலில் 4 நிமிடங்கள் பிரதமர் பயணம் செய்தார்.

அவருடன் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ராம்நாயக் உள்ளிட்டோர் சென்றனர். பின்னர், நொய்டாவில் அமிட்டி பல்கலை கழக மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பேசினார். அப்போது, கடந்த 2002, டிசம்பர் 24ம் தேதி மெட்ரோ ரயிலில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் பயணம் செய்ததை நினைவுகூர்ந்தார்.

அவர் மேலும் பேசுகையில், ‘‘பெட்ரோல், டீசல் செலவை மிச்சப்படுத்த, பொதுமக்கள் அனைவரும் அரசு போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். 2022ல் நாடு தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, பெட்ரோலியம் பொருட்களை இறக்குமதி செய்வதை குறைப்பதோடு, பெட்ரோல் பயன்பாட்டை குறைப்பதை உறுதி செய்ய வேணடும்.

இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதோடு, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் முடியும். இந்த மெட்ரோ சேவை, இப்போதைய தலைமுறை மட்டுமின்றி எதிர்கால சந்ததிக்கும் பயன்படும். எனவே, அரசு போக்குவரத்தை பயன்படுத்துவது தொடர்பாக மக்களின் எண்ணங்களில் மாற்றங்கள் வரவேண்டும்’ என்றார்.மெட்ரோ ரயில் போக்குவரத்து துவக்க விழாவுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அழைக்கப்படவில்லை.

Previous Post

ஜெருசலமில் கிறிஸ்துமஸ் களையிழந்தது

Next Post

வலி மிகுந்த நாள்!

Next Post

வலி மிகுந்த நாள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures