Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜெருசலமில் கிறிஸ்துமஸ் களையிழந்தது

December 26, 2017
in News, Politics, World
0

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலமை அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பால், பெத்லேகமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்தன.இயேசு கிறிஸ்து பிறந்த இடமாக கருதப்படுவது ஜெருசலமின் பெத்லேகம் பகுதி.

கிறிஸ்தவர்களின் புனித தலமான இங்கு ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டும். உலகின் பல நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், பெத்லேகமின் மேன்கர் சதுக்கத்தில் குவிந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவார்.

அதைத்தொடர்ந்து நள்ளிரவு அங்குள்ள தேவாலயத்தில் கூட்டு பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் பேரணி நடைபெறும். ஜெருசலமை சொந்தம் கொண்டாடுவதில் இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே பல ஆண்டாக பிரச்னை நீடித்து வந்தாலும், கிறிஸ்துமஸ் தினத்தில் மட்டும் பெத்லேகமுக்கு பலரும் தவறாமல் வருவார்கள்.

ஆனால், இந்தாண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பால் பெத்லேகமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முற்றிலுமாக களையிழந்தன.

அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 6ம் தேதி ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது பெரும் சர்ச்சையானது. இதற்கு பாலஸ்தீனர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதன் காரணமாக ஜெருசலமின் வெஸ்ட் மேற்கு கரை பகுதியில் கலவரம் பூண்டது. பலர் பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

இந்த வன்முறை காரணமாகவே ஜெருசலத்திற்கு வருவதை இம்முறை பல்வேறு சுற்றுலா பயணிகளும் தவிர்த்துள்ளனர்.இதனால், நேற்று முன்தினம் இரவு மேன்கர் சதுக்கம் ஆரவாரமின்றி பொலிவிழந்து காணப்பட்டது. இஸ்ரேல் மற்றும் மேற்கு கரை நகரில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் மட்டுமே இம்முறை வந்திருந்தனர்.

ஒரு சில வெளிநாட்டு பயணிகள் மட்டுமே கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்றனர். இது குறித்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் பயணி ஒருவர் கூறுகையில், ‘‘ஒரு தனிநபரின் முடிவால் இந்த புனித தலம் களங்கப்பட்டு விடாது. டிரம்ப் என்ன கூறினாலும், ஜெருசலம் அனைவருக்கும் பொதுவானது என்பதை அறிவோம்’’ என்றார்.அங்கு கடைகள் வைத்திருப்பவர்கள் கூறுகையில், ‘‘டிரம்ப் பிரச்னையை தான் ஏற்படுத்தியிருக்கிறார்.

அவரால் தீர்வு காண முடியாது. அவரால் இங்கு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இல்லை, கொண்டாட்டங்கள் இல்லை. அனைவரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்’’ என்றார். ஏற்கனவே கலவரம் நடந்திருப்பதால் இம்முறை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

பாலஸ்தீன படையினர் மேன்கர் சதுக்கத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக, ஜெருசலமை இஸ்ரேல் தலைநகராக அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிரான தீர்மானம் ஐநாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1ஜெருசலம் யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என 3 மதத்தினரின் புனித தலமாக கருதப்படுகிறது.2 ஜெருசலம் யாருக்கு சொந்தம் என்பதில் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டாக மோதல் நிலவி வருகிறது. இதில் மத்தியஸ்தம் செய்து வைக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.3 ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த டிரம்ப், விரைவில் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலத்திற்கு மாற்றுவதாக கூறியிருந்தார்.

‘பாலஸ்தீனர்களுக்கே ஜெருசலம்’பெத்லேகம் மேயரான ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆன்டன் சல்மான் கூறுகையில், ‘‘டிரம்ப்பின் அறிவிப்பு சதியின் ஒரு அங்கம்தான். அவர் பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையேயான அமைதி நடவடிக்கையின் மத்தியஸ்தாராக நடந்து கொள்ளவில்லை. அவரது அறிவிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது.

பாலஸ்தீனர்கள் ஒரே மக்கள், இங்குள்ள கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் இரு தரப்புக்குமே ஜெருசலம் புண்ணிய பூமி’’ என்றார்.‘விலக்குவதால்அமைதி ஏற்படாது’கூட்டு பிரார்த்தனைக்காக ரோமன் கத்தோலிக்க மதகுரு பிஷாபல்லா, ஜெருசலமில் இருந்து இஸ்ரேல் ராணுவ சோதனைச் சாவடிகளை கடந்து பெத்லேகமுக்கு வந்தார்.

பிரார்த்தனையில் அவர், அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான முடிவை எடுக்கும் தைரியத்தை அரசியல் தலைவர்களுக்கு இறைவன் அருள வேண்டுமென பிரார்த்தித்தார். அவர் கூறுகையில், ‘‘சிலரை விலக்குவதால் அமைதி நிலவாது. அனைவரையும் இணைப்பதே ஜெருசலம். விலக்குவதல்ல. ஜெருசலம் நமது அன்னை.

அவர் தனது அனைத்து குழந்தைகளையும் நேசிப்பவள். அதில் யார் ஒருவர் இல்லாவிட்டாலும், தாயால் அமைதியாக இருக்க முடியாது’’ என்றார்.

Previous Post

உலகம் முழுவதும் போர் காற்று வீசுகிறது

Next Post

பணத்தை மிச்சப்படுத்த அரசு போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்

Next Post
பணத்தை மிச்சப்படுத்த அரசு போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்

பணத்தை மிச்சப்படுத்த அரசு போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures