Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மைத்திரி – பஸில் தொலைபேசியில் அவசர பேச்சு!

December 7, 2017
in News, Politics
0

இரு அணிகளாகப் பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சிகள் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான பஸில் ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய பேச்சு இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலவீனப்படுத்துவதற்கு பஸில் ராஜபக்ஷ முயற்சித்து வருகிறார் என சு.க. உறுப்பினர்களாலேயே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அக்கட்சியின் தலைவராக இருக்கும் ஜனாதிபதிக்கும், அரசியல் எதிரியாகப் பார்க்கப்படும் பஸிலுக்கும் இடையே தொலைபேசியூடாக இடம்பெற்றுள்ள மேற்படி கலந்துரையாடலானது கொழும்பு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைத்திரி மற்றும் மஹிந்த அணிகளைச் சங்கமிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள வண.மெதகொட அபயதிஸ்ஸ தேரர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்த சூழ்நிலையில் மேற்படி தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளமையானது ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம், இருதரப்பாலும் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுகளின் தேக்க நிலைமை உட்பட மேலும் சில முக்கிய விடயங்கள் தொடர்பிலேயே தொலைபேசி ஊடாக இருவரும் கலந்துரையாடியுள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியடைவதற்கு பஸில் ராஜபக்ஷவே பிரதான காரணம் எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தூணாக இருந்து சுதந்திரக் கட்சியை மிரட்டும் வகையில் இவரே செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மது பாட்டில்களை திருடி குடித்த அரிய மிருகம்.

Next Post

மாகாண சபை உறுப்பினர் எண்ணிக்கை 40 வீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும்

Next Post
மாகாண சபை உறுப்பினர் எண்ணிக்கை 40 வீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும்

மாகாண சபை உறுப்பினர் எண்ணிக்கை 40 வீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures