பயங்கரவாதி ஹபீஸ் சையத் 2018-ம் ஆண்டுபாக்.பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் ஜமேத் உத் தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத், 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டார். பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக அந்நாட்டு அரசு வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தது. கடந்த நவம்பரில் கோர்ட் உத்தரவுப்படி விடுதலையானார்.
எம்.எம்.எல். எனப்படும் புதிய அரசியல் கட்சி துவங்கியுள்ள சையத் 208-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்க உள்ள பொதுத்தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் எந்த தொகுதி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.