Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கேரள காதலின் இன்னொரு முகம்?

November 12, 2017
in News, World
0

காதலித்து மணம் முடித்து, மதம் மாற்றி பாலியியல் சித்ரவதை செய்ததோடு, தீவிரவாத அமைப்புக்கும் தன்னை பயன்படுத்திக் கொள்ள முயன்றதாக கேரள உயர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

கேரளாவில் இந்து பெண்களை, சில இஸ்லாமிய இளைஞர்கள் ஏமாற்றி திருமணம் செய்து மத மாற்றம், தீவிரவாத அமைப்புகளுக்கு பயன்படுத்துவதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. பாதிக்கப்பட்ட பெண்களே களத்துக்கு வந்து, வழக்கு தொடர்வதும் அதிகரித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
கேரள மாநிலம், வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் அகிலாவுக்கும் (24) ஷபின்ஜகான் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்காக அகிலா தனது பெயரை ஹாதியா என மாற்றிக் கொண்டார். ஆனால் ஷபின்ஜகான் தனது மகளை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாத ஆதிக்கம் நிறைந்த பகுதியில் பணி அமர்த்தவே திருமணம் செய்து கொண்டதாகவும், தன் மகளை மீட்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் அசோகன் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இத்திருமணத்தை ரத்து செய்து, அசோகனோடு அவரது மகளை அனுப்பி வைத்தனர்.

இதனை எதிர்த்து ஷபின் ஜகான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இவ்வழக்கின் விசாரணை கடந்த 30-ம் தேதி வந்த போது, வரும் 27-ம் தேதி அகிலா என்ற ஹாதியா நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். கேரளாவில் இதனை ‘லவ் ஜிகாத்’ என்றே இந்து அமைப்புகள் கூறிவருகின்றனர். கேரள உயர் நீதிமன்றமும் இந்த திருமணத்தை ரத்து செய்தபோது இதே சந்தேகத்தை எழுப்பித் தான் தேசிய புலனாய்வு அமைப்பிடம் விசாரிக்க உத்தரவிட்டது.

மற்றொரு பெண் வழக்கு
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கேரளாவை சேர்ந்த இன்னொரு பெண்ணும் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் அந்த பெண் தரப்பு வழக்கறிஞர் சேதுநாத் கூறுகையில், “கேரள இந்து குடும்பத்தில் பிறந்த பெண், அப்பாவின் பணி நிமித்தம் குஜராத்தில் வளர்ந்தார். உயர் கல்விக்காக பெங்களூர் சென்றபோது, புதுமாகே பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் அறிமுகமாகியுள்ளார். அவர் இந்த பெண்ணை காதலித்து நெருக்கமாக படம் எடுத்துள்ளார். அதை செல்போனில் பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். மிரட்டி, மிரட்டியே கட்டாயமாக மதமாற்றம் செய்துள்ளார்.

ஜாகிர் நாயக்கின் மதப்பிரச்சாரத்தை கேட்க நிர்பந்தித்து இருக்கிறார். கோழிக்கோடு அழைத்து சென்று அப்பெண்ணுக்கு ஆயிஷா என பெயர் மாற்றி திருமணம் செய்துள்ளார். அவருக்கு பாலியல் அடிமையாகவே வைத்துள்ளார். தொடர்ந்து சிரியா ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு பயன்படுத்தவும் திட்டம் தீட்டியிருந்தார். ஒரு கட்டத்தில் இந்த பெண் பெற்றோரை தொடர்பு கொள்ள, அவளுக்கு விமான டிக்கெட்டை எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி, அதை அவள் காட்டி, நிலைமையை எடுத்து சொல்லி மீண்டு வந்ததே பெரும் கதை. கடந்த அக்டோபர் 3-ம் தேதி முதல் அந்த பெண் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவ்வழக்கின் விசாரணை 13-ம் தேதி வருகிறது. ரியாஸ் ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார்.” என்றார்.

பாஜக குற்றச்சாட்டு
பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் கூறுகையில், “கேரளாவில் இந்து பெண்களை இஸ்லாமியர்கள் சிலர் காதலித்து திருமணம் செய்து தீவிரவாத நடவடிக்கை, பாலியல் தொழிலுக்கு பயன்படுத்துவது தொடர்ந்து வருகிறது. கேரளாவில் இடதுசாரி, காங்கிரஸ் இரண்டில் எது ஆட்சிக்கு வந்தாலும் சிறுபான்மையினர் ஓட்டுக்காக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ” என்றார்.

அண்மையில் கேரளம் வந்திருந்த தேசிய மகளிர் ஆணையத்தின் செயல் தலைவர் ரேகா ஷர்மா, “கேரளாவில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளைக்கூட மிரட்டியும், காதலித்தும் மதம் மாற்றுவதாக புகார்கள் வந்துள்ளன. கோழிக்கோட்டில் நடந்த இது தொடர்பான அமர்வில் எனக்கு அனைத்து மதங்கள் மீதும் இது மாதிரியான புகார்கள் வந்துள்ளன. இது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளேன்” என்று தெரிவித்தார். இதனை கேரள மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஜோசப்வயன் மறுத்துள்ளார்.

Previous Post

கணவரைப் பிரிந்து வாழும் பெண்கள் விற்பனைக்கு!

Next Post

லெபனானை தாக்க இஸ்ரேலை சௌதி தூண்டுவதாக ஹெஸ்புல்லா புகார்

Next Post
லெபனானை தாக்க இஸ்ரேலை சௌதி தூண்டுவதாக ஹெஸ்புல்லா புகார்

லெபனானை தாக்க இஸ்ரேலை சௌதி தூண்டுவதாக ஹெஸ்புல்லா புகார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026

Recent News

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026
தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தரப்பு இந்திய அரசுடன் உறவை பலப்படுத்த வேண்டும்! – சிவசக்தி ஆனந்தன்

June 19, 2026
தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

தமிழ்நாட்டின் தனிநபர் கடன் எத்தனை லட்சம்? வெள்ளை அறிக்கையில் வெளியான தகவல்

June 19, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures