Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புரிந்­து­ணர்­விற்­காக தக­வல்­களை கொண்டு செல்ல கூடிய தபால் காரன் நான் !!

October 28, 2017
in News, Politics
0

தமிழ் மற்றும் சிங்­கள சமூ­கத்தின் புரிந்­து­ணர்­விற்­காக தக­வல்­களை கொண்டு செல்ல கூடிய தபால் காரனாக தான் இருப்பதாக தேசிய கல்ந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை திரைப்­பட கூட்­டுத்­தா­ப­னத்தில் நேற்று வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

மதம் மற்றும் மொழி ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாக கொண்டு பாட­சா­லை­களை உரு­வாக்­கு­வதை நிறுத்த வேண்டும். அவ்­வாறு செய்ய விட்டால் ஒரு நாளும் இலங்­கையை திருத்த முடி­யாது

காலா­வ­தி­யான அர­சி­யல்­வா­திகள் ஒதுங்­கிக்­கொண்டு இவ்­வா­றான புதிய சிந்­த­னைக­ளுக்­காக இளை­ஞர்­க­ளுக்கு வாய்ப்­புகள் அளிக்­கப்­பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு மொழி உரிமை இல்லை என்றால் எந்­த­ளவு பிரச்­சி­னைகள் ஏற்­படும் என்­பது அனை­வ­ருக்கும் தெரியும்.

தேசிய கீதம் விவ­கா­ரத்தில் கூட 1948 ஆம் ஆண்டு சுதந்­திரம் பெற்ற போது இரண்டு மொழி­க­ளிலும் தேசிய கீதம் இசைக்­கப்­பட்­டது.

ஆனால் அதன்­பின்னர் தமிழில் இசைக்­கப்­ப­ட­வில்லை. மீண்டும் தமிழில் தேசிய கீதத்தை இசைப்­ப­தற்கு எமக்கு 70 ஆண்­டுகள் சென்­றுள்­ளன.

இதுவே மாற்றம். தாய்­மொ­ழியில் தேசிய கீதத்தை இசைக்­கும்­போது உணர்வு பூர்­வ­மாக அனு­ப­வித்து இசைக்க முடி­கின்­றது. புரி­யாத மொழியில் பாடு­வதால் எவ்­வி­த­மான பலனும் இல்லை என சுட்டிக்காட்டினார்.

வடக்­கிலும் தெற்­கிலும் அடிப்­படை வாதிகள் உள்­ளனர். அதி­கா­ரத்தை கைப்­பற்­று­வ­தற்­காக பல்­வேறு முயற்­சி­களை மேற்­கொள்­கின்­றனர் அவற்­றுக்கு வாய்ப்­ப­ளிக்க முடி­யாது.

நான் இந்­நாட்டில் ஜனா­தி­ப­தி­யாக போவ­தில்லை. பிர­த­மா­ரா­கு­வதும் இல்லை. அமைச்­ச­ராக தொடர்ந்து இருக்­கப்­போ­வதும் இல்லை. காலா­வ­தி­யான அர­சி­யல்­வா­திகள் ஒதுங்­கிக்­கொள்ள வேண்டும்.

வடக்கு மற்றும் தெற்கில் இந்த பிரச்­சினை உள்­ளது. இளை­ஞர்­க­ளுக்கு வாய்ப்­புகள் அளிக்­கப்­பட வேண்டும். அப்­போது தான் புதிய சிந்­த­னைகள் பிறக்கும். பழ­மை­யான மர­புகள் மற்றும் சம்­பி­ர­தா­யங்­களில் இருந்து வெளியில் வர­வேண்டும்.

தமிழ் மக்­க­ளுக்­குள்ள பிரச்­சி­னைகள் என்ன என்­பது எனக்கு நன்கு தெரியும். அதே­போன்று இந்த விடயத்தில் சிங்கள மக்களுக்குள்ள சந்தேகங்களும் எனக்கு தெரியும்.

எனவே இந்த இரண்டு சமூகங்களுக்கும் தகவல்களை கொண்டு செல்லக்கூடிய தபால் காரனாக இருப்பதோடு இரு தரப்பையும் இணைக்கும் பாலமாகவும் உள்ளேன் என அவர் தெரிவித்தார்.

Previous Post

தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்ட மூவருக்கு 31.3 மில்லியன் டொலர்கள் நஷ்ட ஈடு!

Next Post

ஹரின் பெர்ணான்டோவின் அதிரடி!!

Next Post
ஹரின் பெர்ணான்டோவின் அதிரடி!!

ஹரின் பெர்ணான்டோவின் அதிரடி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures