Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதுக்குடியிருப்பு காணிகள் விடுவிக்கப்படாமைக்கு அரச அதிபரும், பிரதேச செயலரும் பொறுப்பு!

October 16, 2017
in News, Politics
0
புதுக்குடியிருப்பு காணிகள் விடுவிக்கப்படாமைக்கு அரச அதிபரும், பிரதேச செயலரும் பொறுப்பு!

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு நகர மத்தியில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலருமே பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவப்பிரகாசம் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இராணுவ வசமுள்ள புதுக்குடியிருப்பு மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் குறித்த காணி உரிமையாளர்களுடனான சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர், இந்த காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியின் வழங்கிய உத்தரவையும் உதாசீனம் செய்து இராணுவம் தொடர்ந்தும் இந்த காணியை விடுவிக்காமல் இருப்பது கவலையான விடயம் அத்தோடு இந்த விடயத்தில் அரச அதிகாரிகளுக்கும் மக்களுக்கு பொய் கூறி விட்டதாகவே உணருகின்றேன். மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மக்களோடு இணைந்து நானும் போராடுவேன்.

புதுக்குடியிருப்பு நகரை அண்டி பொதுமக்களுக்கு சொந்தமான காணியை கையகப்படுத்தியுள்ள இராணுவம் அதனை விடுவிக்க வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்ததன் பயனாக ஒருதொகுதி காணிகள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டதோடு மிகுதி காணிகள் மூன்று மாதம் மற்றும் ஆறு மாத காலம் அடிப்படையில் இரு கட்டடங்களாக விடுவிக்கப்படும் என இராணுவத்தின் உறுதிமொழியை முல்லைத்தீவு அரச அதிபர் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் ஆகியோர் பொதுமக்களிடம் என் முன்னிலையில் வழங்கியிருந்தனர்.

ஆனால் அந்த கால அவகாசம் முடிந்து சில மாதங்களும் கடந்துள்ள நிலையில் இன்று என்னை இந்த காணி உரிமையாளர்கள் சந்தித்து முறையிட்டுள்ளதோடு மீண்டும் போராட போவதாக அறிவித்துள்ளனர். எனவே இந்த மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய அரச அதிகாரிகள் இதுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களாக இருக்கின்றனர்.ஆனால் அவர்களோ ஏதோ சாட்டு போக்குகளை சொல்லி விட்டு இடமாற்றத்தை பெற்று சென்றுவிடலாம் என்று முயற்சிக்கின்றார்கள்.

மக்களுக்கு உறுதிமொழி வழங்கியவர்கள் அதனை நிறைவேற்ற வேண்டும் இல்லையேல் இந்த மக்களுடன் சேர்ந்து நான் மட்டக்களப்பு வரை சென்று போராட வேண்டும் என குறித்த அதிகாரிகளுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் என்று தெரிவித்தார்.

Previous Post

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை: சம்பந்தன் தீர்மானம்

Next Post

அரசியல் கைதிகள் விவகாரம்: ஜனாதிபதி- எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு

Next Post
அரசியல் கைதிகள் விவகாரம்: ஜனாதிபதி- எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு

அரசியல் கைதிகள் விவகாரம்: ஜனாதிபதி- எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

லலித் – குகன் வழக்கில் கோட்டாபாயவுக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் வழங்கிய அனுமதி

June 3, 2026
டயமண்ட் லீக் ஈட்டி எறிதலில் இரண்டாம் இடம்பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தார் ருமேஷ் தரங்க

டயமண்ட் லீக் ஈட்டி எறிதலில் இரண்டாம் இடம்பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தார் ருமேஷ் தரங்க

June 3, 2026
பணவீக்கம் 7% வரை அதிகரிக்கக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

பணவீக்கம் 7% வரை அதிகரிக்கக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

June 2, 2026
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு விஜயம் 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு விஜயம் 

June 2, 2026

Recent News

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

லலித் – குகன் வழக்கில் கோட்டாபாயவுக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் வழங்கிய அனுமதி

June 3, 2026
டயமண்ட் லீக் ஈட்டி எறிதலில் இரண்டாம் இடம்பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தார் ருமேஷ் தரங்க

டயமண்ட் லீக் ஈட்டி எறிதலில் இரண்டாம் இடம்பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தார் ருமேஷ் தரங்க

June 3, 2026
பணவீக்கம் 7% வரை அதிகரிக்கக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

பணவீக்கம் 7% வரை அதிகரிக்கக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

June 2, 2026
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு விஜயம் 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு விஜயம் 

June 2, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures