Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

20ஆவது திருத்­தம் மீது இன்று வட­மா­காண சபை­யில் விவா­தம்

September 4, 2017
in News, Politics
0

நாட்­டில் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள 20ஆவது திருத்­தச் சட்ட வரைவு வடக்கு மாகாண சபை­யில் இன்­றைய தினம் விவா­தத்­துக்கு எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. அதனை வடக்கு மாகாண சபை எதிர்க்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. எனி­னும் அத­னைத் திருத்­தங்­க­ளு­டன் ஆத­ரிப்­ப­தற்­கான யோச­னையை வடக்கு மாகாண சபை முன்­வைக்­கக் கூடும் என்­றும் உறுப்­பி­னர்­க­ளுக்கு இடையே பேசப்­பட்­டது.

அனைத்து மாகாண சபை­க­ளுக்­கு­மான தேர்­தலை ஒரே நாளில் நடத்­து­வ­தற்­கான யோச­னையை முன்­வைத்­துள்ள 20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரைவு மாகாண சபை­க­ளின் கருத்­துக்­களை அறி­வ­தற்­காக அனுப்­பப்­பட்­டது. வட­மத்­திய மாகாண சபை சட்ட வரை­வுக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளது. ஊவா மற்­றும் தென் மாகாண சபை­க­ளில் சட்­ட­வ­ரைவு தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது.

பலத்த எதிர்­பார்ப்­புக்கு மத்­தி­யில் 20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரைவு வடக்கு மாகாண சபை­யில் இன்று விவா­தத்­துக்கு எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரைவை எதிர்ப்­போம் என்று மாகாண சபை­யில் வைத்­துத் தெரி­வித்­தி­ருந்த வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அதன் பின்பு ஆங்­கில ஊட­கத்­துக்கு வழங்­கிய செவ்­வி­யில், காபந்து அரசு அமைக்க இட­ம­ளிக்­கப்­பட்­டால் 20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரைவை ஆத­ரிக்­க­லாம் என்ற சாரப்­பட குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இத­னால் 20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரைவு தொடர்­பில் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளி­டம் குழப்­ப­மான நிலமை காணப்­ப­டு­கின்­றது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இது தொடர்­பில் தனது நிலைப்­பாட்டை கட்சி உறுப்­பி­னர்­க­ளி­டம் தெரி­விக்­க­வில்லை. ஆத­ரிப்­பதா? திருத்­தங்­க­ளு­டன் ஆத­ரிப்­பதா? அல்­லது எதிர்ப்­பதா? என்­ப­தில் முடி­வெ­டுக்க முடி­யாத நிலை­யில் உறுப்­பி­னர்­கள் உள்­ள­னர்.

பெரும்­பா­லும் திருத்­தங்­க­ளு­டன் ஆத­ரிப்­ப­தற்­கான தீர்­மா­னம் எடுக்­கப்­ப­ட­லாம் என்று தெரி­கின்­றது. இதே­வேளை, மாகாண சபை­கள் திருத்­தச் சட்­ட­வ­ரைவை தோற்­க­டித்­தா­லும், நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மை­யு­டன் அதனை நிறை­வேற்றி நடை­மு­றைப்­ப­டுத்­து­வோம் என்று அமைச்­ச­ர­வைப் பேச்­சா­ளர் தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

Previous Post

தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றவர் சிக்கினார் !

Next Post

வாள் வைத்திருந்தவர் கைது

Next Post
வாள் வைத்திருந்தவர் கைது

வாள் வைத்திருந்தவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures