பருத்தித்துறையில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3 மணியளவில் தீ பரவ ஆரம்பித்தது என்று கூறப்படுகின்றது.
தீ அணைப்பு படையினர் நீண்ட போராட்டத்தின் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.விற்பனை நிலையம் முற்றாக நாசமாகியுள்ளது என்று கூறப்படுகின்றது.அதேவேளை, அந்தப் பகுதியில் மண்ணெண்னை கான் ஒன்று காணப்பட்டது என்று கூறப்படுகிறது. பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.