சிறுவனுக்கு சாதாரண வைரஸ் தொற்று தான் என மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறிய நிலையில் நோய் பாதிப்பு அதிகமாகி சிறுவன் உயிரிழந்துள்ளான்.
பிரித்தானியாவின் மான்செஸ்டரில் உள்ள Wigan நகரை சேர்ந்தவர் Thomas (38), இவர் மனைவி Joanne (34), இவர்களின் மகன் Connor Horridge (6).
Connor-க்கு திடீரென கடுமையான காது வலியும், உடல்நலக் கோளாறும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பெற்றோர் Connor-ஐ தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவனை பரிசோதித்த மருத்துவர்கள் இது வைரஸ் தொற்று தான், இதுகுறித்து பெரிதாக நீங்கள் கவலையடைய தேவையில்லை என கூறியுள்ளனர்.
சில மாத்திரைகளையும் எழுதி கொடுத்து, அதை தொடர்ந்து சாப்பிட சொல்லியுள்ளனர், இது போலவே இரண்டாம் பரிசோதனையின் போதும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சில நாட்கள் கழித்து Connor திடீரென அம்மா என கத்தி கொண்டே வீட்டு வாசலில் மயங்கி விழுந்துள்ளான்.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் Connor பரிதாபமாக கடந்த டிசம்பரில் உயிரிந்துள்ளான்.
காதில் அதிகளவில் புண் ஏற்பட்டு அது சீழ்ப்பிடிப்பாக மாறி அதன் காரணமாக ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக Connor உயிரிழந்தது தெரியவந்தது.
Connor-ன் பெற்றோர் கூறுகையில், எங்கள் மகனை ஆரம்பத்திலேயே மருத்துவர்கள் சரியாக ரத்த மாதிரியை எடுத்து பரிசோதித்திருந்தால் இது நடக்காமல் இருந்திருக்க வாய்ப்புண்டு என கூறியுள்ளனர்.
Connor உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் கூறுகையில், ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த தொற்று இப்படி திடீரென பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.