29 வயதுடைய பெண் ஒருவர் சரமாரியாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணின் கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Isère இன் Heyrieux பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. 3 தொடக்கம் 8 வரையான மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரின் விசாரணைகளில் நிறை மது போதையுடன் வீட்டுக்குள் நுழைந்த அப்பெண்ணின் கணவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார். கத்தி ஒன்றின் மூலம் அப்பெண்ணின் உடலில் 16 தடவைகள் வெட்டியுள்ளதாக காவல்துறையினர் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும் பெண்ணின் சடலம் வீட்டின் முன் வாசலுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கொலையை மேற்கொண்ட அப்பெண்ணின் கணவர் உடனடியாக காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மூன்று குழந்தைகளையும் மீட்டு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.