குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு 3 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் குஜராத் சட்டசபையில் நேற்று நடைபெற்றது. பாஜக சார்பில் அதன் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் பாஜகவின் அமித் ஷா, ஸ்மிருதி இராணி ஆகியோரும் ராஜ்யசபாவுக்கு தேர்வாகியுள்ளனர். இதனையடுத்து ராஜ்யசபாவுக்கு தேர்வாகியுள்ள அமித் ஷா, ஸ்மிருதி இராணி ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.