Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சம்பூரில் நிரந்தரமாக நிலைகொள்கிறது சிறிலங்காவின் மரைன் பற்றாலியன்

July 30, 2017
in News
0
சம்பூரில் நிரந்தரமாக நிலைகொள்கிறது சிறிலங்காவின் மரைன் பற்றாலியன்

சிறிலங்கா கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, மரைன் பற்றாலியன், திருகோணமலை சம்பூரில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, சம்பூரில் உள்ள எஸ்எல்என்எஸ் விதுர கடற்படைத் தளத்தில் மரைன் படையினருக்கான விடுதி அறை, மூத்த மற்றும் இளைய அதிகாரிகளுக்கான உணவுக்கூடங்கள், நான்கு மாடிகளைக் கொண்ட நிர்வாக வளாகம் என்பன சிறிலங்கா கடற்படைத் தளபதியினால் நேற்று திறந்து வைக்கப்பட்டன.

மரைன் படையினருக்கான பயிற்சி மற்றும் நிர்வாகத் தேவைகளுக்கு ஏற்ற வசதிகளைக் கொண்டதாக இந்த தளம் மாற்றப்பட்டு வருகிறது.

சம்பூர் கடற்படைத் தளம் அமைந்துள்ள பகுதியில் தமிழ் மக்களின் காணிகள் பல இன்னமும் விடுவிக்கப்படாதுள்ளன.

இந்த நிலையில், சிறிலங்கா கடற்படையின் வலிமை வாய்ந்த படைப்பிரிவான, மரைன் படைப்பிரிவு அங்கு நிரந்தரமாக நிலைகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கிய உடன்பாடு கிழித்தெறியப்படும் !!

Next Post

சிறிலங்கா இராணுவத் தளபதியின் யாழ்ப்பாணத்துக்கான முதல் பயணம்

Next Post
சிறிலங்கா இராணுவத் தளபதியின் யாழ்ப்பாணத்துக்கான முதல் பயணம்

சிறிலங்கா இராணுவத் தளபதியின் யாழ்ப்பாணத்துக்கான முதல் பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures