Friday, May 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கதைத்துக்கொண்டிருக்கின்றோமே தவிர, முன்னேற்றத்தினை காணமுடியவில்லை – ரணில்

July 29, 2017
in News, Politics
0
கதைத்துக்கொண்டிருக்கின்றோமே தவிர, முன்னேற்றத்தினை காணமுடியவில்லை – ரணில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

யுத்தம் முடிவடைந்ததும் நாங்கள் வலுவிழக்கவில்லை.பாரிய அபிவிருத்திகளையும் சாவால்களையும் நோக்கியோ சென்றுகொண்டிருக்கின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மட்டக்களப்புக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்ற கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினார்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர், கிழக்கு மாகாணத்தில் அதிகளவான வழங்கள் உள்ளது.அவற்றில் முழுமையான பிரயோசனங்கள் அடையப்படவில்லை. அந்த வளங்களை பயன்படுத்தி எவ்வாறு பிரயோசனம் அடையளாம் இலங்கையில் மூவின மக்களும் வாழும் பிரதேசமாக காணப்படுகின்றது. மூவினங்களும் ஒன்றிணைந்து எவ்வாறு இந்த திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாகவே நாங்கள் இங்கு கலந்துரையாடியுள்ளோம்.

கிழக்கு மாகாணசபையும் மத்திய அரசாங்கமும் ஒன்றிணைந்து பயணிக்கும் வகையிலான திட்டங்களை இங்கு நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.

அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. மாகாணசபையுடன் இணைந்து மேலதிக அபிவிருத்திகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் ஆராய்கின்றோம்.அதனை எவ்வாறு குறுகிய காலத்திற்குள் நடைமுறைப்படுத்துவது என்பதுதொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.

கதைத்து கதைத்துக்கொண்டிருக்கின்றோமே தவிர எதுவித முன்னேற்றத்தினையும் நாங்கள் காணமுடியவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வளங்களை பயன்படுத்தி அபிவிருத்திகளை மேற்கொள்ளும்போது அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.குறைந்தபட்சம் எதனையாவது செய்துள்ளோமா என்பதையாவது காட்டவேண்டும். யுத்தின் பின்னர் வட,கிழக்குக்கு பெருமளவான நிதிகள் வழங்கப்பட்டுள்ளது.அதனை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துவது நாங்கள் ஆய்வுசெய்து அதனைக்கையாளவேண்டும்.

சர்வதேசத்தின் ஊடாக அந்த நிதிகள் வழங்கப்பட்டுள்ளது.அதனை நாங்கள் உரிய முறையில் பயன்படுத்தவேண்டும். அதேபோன்று திருகோணமலையில் சிங்கப்பூர் அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.

சில கிராமங்களும் அபிவிருத்திசெய்யப்பட்டுள்ளது.பாரிய அபிவிருத்திகள் வெளிநாடுகளினால் நடாத்தப்படுகின்றது. மட்டக்களப்பில் உள்ள விமான நிலையத்தினை இலங்கையில் உள்ள ஏனைய விமான நிலையங்களுடன் ஒருங்கிணைத்து அதன் மூலம் சுற்றுலாத்துறையினை அபிவிருத்திசெய்யமுடியும் என எதிர்பார்க்கின்றோம்.

குறைந்த நேரத்தில் மாத்தறையில் இருந்து மட்டக்களப்பு வந்துசெல்லமுடியும். அதேபோன்று பாதை புனரமைப்புக்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

காடுகளை பாதுகாத்து சுற்றுலாத்துறையினை ஈர்க்கும் இடங்களாக மாற்றுவதன் மூலமும் எமது வளங்களை சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக மாற்றுவதன் மூலமும் நாங்கள் இப்பகுதிகளை அபிவிருத்திசெய்யமுடியும். எமது வளங்களை சரியானமுறையில் திட்டமிட்டு பயன்படுத்தப்படுமானால் எமது பகுதிகளில் உள்ள வாழ்வாதார பிரச்சினைகள் குறைவடையும்.அதற்கான உதவிகளை அரசாங்கமும் வழங்கும்.

சுற்றுலாத்துறை மூலம் மீன்பிடித்துறையினை அபிவிருத்திசெய்வதற்கும் மீன்பிடியாளர்களின் வளத்தினை அதிகரிப்பதற்கும் பாரியளவிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கமுடியும். தனிப்பட்டவர்களின் காணிகளை அவர்களுக்கு வழங்கவேண்டும்.

அபகரிக்கப்பட்ட நிலங்களை நாங்கள் மீண்டும் மீட்கவேண்டும். இந்த அபிவிருத்திட்டங்களை மாகாண,மாவட்ட.பிரதேச ரீதியாக நடைமுறைப்படுத்தவேண்டும். இதனை சிலர் எவ்வாறு செய்வது என கேட்கின்றனர். இதனை சவாலாக எடுத்து செய்துபார்க்கவேண்டிய தேவையுள்ளது. குறுகிய காலத்திற்குள் தீர்மானிக்கப்படும் வேலைத்திட்டங்கள் வெற்றியடைவதில்லையென கூறுகின்றனர். அதனை செய்துபார்ப்போம்.

யுத்தம் முடிவடைந்ததும் நாங்கள் வலுவிழக்கவில்லை.பாரிய அபிவிருத்திகளையும் சாவால்களையும் நோக்கிய சென்றுகொண்டிருக்கின்றோம் என அங்கு மேலும் தெரிவித்தார்.

 

Previous Post

“வடக்கிற்கு மாத்திரம் சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுகிறார்”

Next Post

ரிமோட் கொன்ரோல் ஊடாக இயங்கும் முச்சக்கரவண்டி !!

Next Post
ரிமோட் கொன்ரோல் ஊடாக இயங்கும் முச்சக்கரவண்டி !!

ரிமோட் கொன்ரோல் ஊடாக இயங்கும் முச்சக்கரவண்டி !!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மும்பை அணிக்கு எதிரான ஆட்டம் | டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்

இண்டியன் பிறீமியர் லீக் (IPL) ஒருவாரத்திற்கு இடைநிறுத்தம்

May 9, 2025
மாணவியை கடத்த முயன்ற சந்தேக நபர் ; பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு!

பாடசாலைக்கு முன்னால் மாணவியை கடத்த முயன்றமைக்கு காரணம் என்ன?

May 9, 2025
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவைப் பெற இரு கட்சிகள் பேச்சுவார்த்தை

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவைப் பெற இரு கட்சிகள் பேச்சுவார்த்தை

May 9, 2025
டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

May 9, 2025

Recent News

மும்பை அணிக்கு எதிரான ஆட்டம் | டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்

இண்டியன் பிறீமியர் லீக் (IPL) ஒருவாரத்திற்கு இடைநிறுத்தம்

May 9, 2025
மாணவியை கடத்த முயன்ற சந்தேக நபர் ; பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு!

பாடசாலைக்கு முன்னால் மாணவியை கடத்த முயன்றமைக்கு காரணம் என்ன?

May 9, 2025
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவைப் பெற இரு கட்சிகள் பேச்சுவார்த்தை

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவைப் பெற இரு கட்சிகள் பேச்சுவார்த்தை

May 9, 2025
டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

May 9, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures