Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதை ஏற்க முடியாது -ஏ.எல்.தவம்

July 28, 2017
in News, Politics
0
மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதை ஏற்க முடியாது -ஏ.எல்.தவம்

தற்போதுள்ள விகிதாசார முறையை இல்லாமல் செய்து, கலப்புப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்காகவும், ஒரே நேரத்தில் அனைத்து மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடாத்துவதற்காகவும், மாகாண சபைத் தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இச்செய்தி எம்மைப் பொறுத்த வரை கவலைக்குரிய கசப்பான விடயமாகும். தேர்தல்களைப் பிற்போடுவது ஜனநாயக வழி முறைகளில் தடங்கல்களை ஏற்படுத்துவதாக அமைவதோடு, மக்களின் தெரிவில ஆதிக்கம் செலுத்தும் ஒரு முயற்சியுமாகும்.
காலம் முடிந்தால், யார் வெல்வார் யார் தோற்பார் என்பதை விட, மக்கள் அடுத்து வரும் 5 வருடங்களுக்கான தமது பிரதிநிதி யார்? என்பதைத் தீர்மானிக்கின்ற தெரிவை செய்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும். அதில் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆதிக்கம் செலுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.
அதுமாத்திரமல்லாமல், தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையினால், பெரும்பான்மை மக்களுக்குள் சிதறி வாழும் சிறுபான்மை சமூகங்களாலும், மாவட்டரீதியில் வாக்குகளைச் சேர்ப்பதனூடாக பிரதிநிதித்துவங்களைப் பெற முடிகிறது.
ஆனால், கலப்பு முறை அறிமுகப்படுத்தப்படுமாக இருந்தால் அப்படியான சந்தர்ப்பங்கள் இல்லாமல் போகும். சிறு கட்சிகளுக்கும் இதே சவால் வரக்கூடும். ஜே.வி.பி போன்ற கட்சிகளுக்கு மட்டும் இது சாதகமாக அமையலாம். ஆனால் ஏனைய சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் பாதிக்கப்படும்.
உள்ளூராட்சி தேர்தல் முறையும் பாராளுமன்ற தேர்தல் முறையும் ஒன்றாக இருப்பதால் மாகாண சபை தேர்தல் முறையும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒன்றும் கட்டாயம் கிடையாது.
உலகளவில் பல நாடுகளில் ஒவ்வொரு அதிகார மட்டத் தேர்தல் முறைகளும் தேவைக்கேற்ப வித்தியாசம் வித்தியாசமாக இருக்கின்றன. அதனால், இலங்கையிலும் மாகாண சபைத் தேர்தல் முறைமை இப்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையே தொடர்வதில் ஒரு தீங்கும் வராது.
எனவே, மாகாண சபைத் தேர்தல் முறைமை மாற்றப்படுவதையும் தேர்தல்கள் பிற்போடப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடு, மக்களின் தெரிவில் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஜனநாயக விழுமியங்களுக்கு ஒவ்வாத செயலை நிறுத்திக்கொள்ளவும் வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Previous Post

தாய் ஷிராந்திக்கும் மகன் யோஷிதவுக்கும் வாக்குமூலம் வழங்க வேறு தினங்கள்

Next Post

டிரம்பு உத்தரவிட்டால் அடுத்த வாரமே சீனா மீது அணு ஆயுத தாக்குதல்: அமெரிக்க கடற்படை தளபதி

Next Post

டிரம்பு உத்தரவிட்டால் அடுத்த வாரமே சீனா மீது அணு ஆயுத தாக்குதல்: அமெரிக்க கடற்படை தளபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures