Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

கோச்சிங் பற்றி புதிதாக எதையும் நான் புரிந்து கொள்ளத் தேவையில்லை என்று நினைக்கிறேன்: விராட் கோலி

July 20, 2017
in Sports
0
கோச்சிங் பற்றி புதிதாக எதையும் நான் புரிந்து கொள்ளத் தேவையில்லை என்று நினைக்கிறேன்: விராட் கோலி

2015 இலங்கை தொடர்தான் அணியின் மைல்கல் என்று கூறிய கேப்டன் விராட் கோலி, பயிற்சி பற்றி தான் புதிதாக எதையும் தெரிந்துகொள்ளத் தேவையில்லை என்று கருதுவதாகத் தெரிவித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடர் வெற்றிகள் 2015 இலங்கைத் தொடரிலிருந்தே தொடங்கியதாக விராட் தெரிவித்தார். காலே டெஸ்ட்டில் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பிறகு மீண்டெழுந்து அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றதை மைல்கல்லின் தொடக்கம் என்கிறார் கோலி.

ரவி அஸ்வின் 21 விக்கெட்டுகளையும் அமித் மிஸ்ரா 15 விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா 13 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்நிலையில் கொழும்பு புறப்படும் முன் விராட் கோலி அந்தத் தொடரைப் பற்றி நினைவுகூர்கையில் “அணிப் பண்பாடு அப்போது உருவாக்கப்பட்டதே” என்றார்.

“அந்த இலங்கைத் தொடர்தான் எங்களது மைல்கல். அப்போது முதல் வீரர்கள் முதிர்ச்சியடைந்துள்ளனர். 24 மாதங்கள் ஆகிவிட்டது. அயல்நாட்டு மண்ணில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது, உள்நாட்டுக்கு வெளியே வெல்லக்கூடிய அணி நம்மிடையே உள்ளது என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியது அந்தத் தொடரே.

எந்த டெஸ்ட் போட்டியிலும் வெல்வதே குறிக்கோள் என்ற பண்பாட்டை உருவாக்கியது அந்தத் தொடர்தான். காலே டெஸ்ட் போட்டியில் தோற்றது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஆனால் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் மீண்டெழுந்தது அணியில் உருவாகிய பண்பாட்டினால்தான். அதுவும் அணியில் அனுபவம் குறைவான வீரர்கள் இருந்த போது. இலங்கையை ஒப்பிட்டுப் பார்த்தீர்களென்றால் நாங்கள் ஆடிய டெஸ்ட் எண்ணிக்கை அப்போது குறைவு. அயல்நாட்டில் எந்தச் சூழ்நிலையிலும் வெற்றி பெற முடியும் என்ற திறமையைக் காட்டினர், இதுதான் அனைத்தையும் மாற்றியது.

அப்போது முதல் இந்திய அணியின் வெற்றிகளைப் பார்த்து வருகிறீர்கள். இப்போது அயல்நாட்டுத் தொடர்தான், அதே மனநிலைதான். 2015-ல் இருந்த அதே மனநிலை இந்தத் தொடருக்கும் பொருந்தும்.

ரவிசாஸ்திரி பயிற்சி பற்றி…

நானும் அவரும் 2014-16 வரை பணியாற்றியுள்ளோம். எங்களிடையே நல்ல புரிதல் உள்ளது. இது உங்களுக்கும் தெரிந்திருக்கும். எனவே கோச்சிங் பற்றி நான் எதையும் புதிதாகத் தெரிந்து கொள்ளத் தேவையில்லை என்றே கருதுகிறேன். நாங்கள் ஏற்கெனவே இணைந்து பணியாற்றியதால் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பது தெரியும், எனவே புரிந்து கொள்ள பெரிய முயற்சி ஒன்றும் தேவையிருக்காது, என்றார்.

ஒவ்வொரு பயிற்சியாளரும் ஒவ்வொரு விதமாக செயல்படுவார்கள் என்பதை கோலி புரிந்து கொள்ள வேண்டும் என்று கங்குலி கூறியதற்கு சூசகமாக கோலி பதிலளித்தது போல் தெரிகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியின் கடந்த தொடர் ஸ்கோர் 0.13 12, 15, 6. ஆனால் இதற்கு முந்தைய தொடர்களில் வெளுத்துக் கட்டினார்.

இதனால் அழுத்தம் உள்ளதா? என்ற கேள்விக்கு, “கூடுதல் அழுத்தம் எதுவும் இருப்பதாக நினைக்கவில்லை, ஏனெனில் என்ன நடக்குமோ அது நடந்தே தீரும். வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை, இதுதான் என் நம்பிக்கை. ஒரு அணியாக எதைச் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதையே சாதிக்க முயலுகிறோம். நாம் அனைவருமே கடந்த காலத்தில் கடினப்பாடுகளை கண்டிருக்கிறோம். விமர்சனமும், விமர்சிக்கப்படுவதும் புதிதல்ல.

கேப்டன் பொறுப்பினால் கூடுதல் அழுத்தங்கள் இல்லை. வீரராகவே தொடங்கினேன், அணிக்காக சிறந்ததைச் செய்ய நினைத்தேன். தொடர்ந்து பொறுப்பைச் சுமந்து வருகிறேன். தொடர்ந்து பொறுப்பை எடுத்துக் கொள்வேன். அதாவது நான் கேப்டன் பொறுப்பில் இருக்கும் வரை நான் எனக்கான பொறுப்புகளை முறையே செய்வேன். இப்படியான புறக்காரணிகளை நான் யோசித்துக் கொண்டிருந்தால் நான் அவுட் ஆனால் என்ன என்ற மனநிலையில் களமிறங்குவதற்குச் சமம் எனவே மனநிலைதான் முக்கியம் முன்னகர்வதுதான் முக்கியம்.

புரிதல் மற்றும் தொடர்புபடுத்தும் முறை ஆகியவை வாழ்க்கையின் அனைத்திலும் உள்ளதுதான். அப்படித்தான் ஓய்வறையும். வாழ்க்கையிலும் கூட எந்த ஒரு உறவும் நிலைபெற இத்தகைய அனைத்து விஷயங்களும் தேவை. கிரிக்கெட்டுக்கு மட்டும் இது பொருந்தக் கூடியதல்ல. வாழ்க்கையில் ஒவ்வொருவரும் உறவுகளில் இத்தகைய அனுபவத்தைக் கடந்து வந்தவர்களே, அதே விதிகள்தான் இதற்கும் பொருந்தும். அதுதான் இதுவும், ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்புபடுத்தும் முறை” என்றார் விராட் கோலி.

Previous Post

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இந்தியா – இலங்கை உலகக் கோப்பை இறுதிப் போட்டி

Next Post

அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்த என்ன வாய்ப்பு?

Next Post
அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்த என்ன வாய்ப்பு?

அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்த என்ன வாய்ப்பு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கிளாஸ்கோவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை பாலித்த பண்டார வென்று கொடுத்தார்

கிளாஸ்கோவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை பாலித்த பண்டார வென்று கொடுத்தார்

July 30, 2026
செம்மணி மனிதப் புதைகுழி : கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி : கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

July 30, 2026
காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 37வது நாளாகவும் கேப்பாப்பிலவில் இன்று போராட்டம்

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 37வது நாளாகவும் கேப்பாப்பிலவில் இன்று போராட்டம்

July 30, 2026
யாழைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் கனடாவில் காலமானார்

யாழைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் கனடாவில் காலமானார்

July 30, 2026

Recent News

கிளாஸ்கோவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை பாலித்த பண்டார வென்று கொடுத்தார்

கிளாஸ்கோவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை பாலித்த பண்டார வென்று கொடுத்தார்

July 30, 2026
செம்மணி மனிதப் புதைகுழி : கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி : கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

July 30, 2026
காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 37வது நாளாகவும் கேப்பாப்பிலவில் இன்று போராட்டம்

காணிகளை விடுவிக்க வலியுறுத்தி 37வது நாளாகவும் கேப்பாப்பிலவில் இன்று போராட்டம்

July 30, 2026
யாழைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் கனடாவில் காலமானார்

யாழைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் கனடாவில் காலமானார்

July 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures