இந்நிலையில், மும்பை தொழிலதிபர் ஒருவரின் பேத்திக்கும் பிரபாஸுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இருப்பினும், பெரும்பாலும் இது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. பிரபாஸின் திருமணம் அடுத்த வருடம் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் ராசி சிமெண்ட் நிறுவனத்தின் சேர்மன் பூபதிராஜுவின் பேத்திக்கு திருமண பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக மும்பை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இவருடைய பேத்தியைத்தான் பிரபாஸுக்கு பேசி முடித்திருக்கிறார்களோ? என்ற ஒரு ஐயமும் எழுந்துள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘பாகுபலி-2’ படத்திற்காக கிட்டத்தட்ட 5 வருடங்களாக எந்த படங்களிலும் ஒப்புக்கொள்ளாமல் இருந்த பிரபாஸ், தற்போது ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.