Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரெயிலில் தன்னைத் தானே தீ வைத்துக்கொண்டு ஓடிய தீவிரவாதி? 17 பேர் படுகாயம்: வெளியான அதிர்ச்சி வீடியோ

February 12, 2017
in News
0
ரெயிலில் தன்னைத் தானே தீ வைத்துக்கொண்டு ஓடிய தீவிரவாதி? 17 பேர் படுகாயம்: வெளியான அதிர்ச்சி வீடியோ

ரெயிலில் தன்னைத் தானே தீ வைத்துக்கொண்டு ஓடிய தீவிரவாதி? 17 பேர் படுகாயம்: வெளியான அதிர்ச்சி வீடியோ

ஹாங்காங்கில் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன்னைத்தானே தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவத்தால் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹாங்காங்கின் மிகவும் பரபரப்பாக காணப்படும் Tsim Sha Tsui ரெயில்வே சுரங்கப்பாதையில் காலை நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் பணிகளுக்கு செல்வதற்காக ரெயிலுக்காக காத்திருந்தனர்.

குறித்த ரெயிலில் ஏரளமானோர் ஏறியுள்ளனர். அப்போது அங்கிருந்த பயணிகளுக்கு கரும்புகையின் வீச்சு ஏற்பட்டுள்ளது, அதன் பின்னர் பிளாஸ்டிக் எரிந்தால் எப்படி ஒரு வாசம் வருமோ அது போன்று வாசனை வந்துள்ளது.

இதனால் அனைவரும் உடனடியாக ரெயிலில் இருந்து வெளியேற முற்பட்ட போது, ரெயிலில் இருந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன் உடல் தீ பிடித்த நிலையில் ரெயிலின் உள்ளே இருந்து கத்திய படி வெளியே வந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அனைவரும் தீவிரவாதி என மிரண்டு கூச்சலிட்ட படி அலறி அடித்து ஓடியுள்ளனர். இதனால் 17 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

ரெயில் நிலையத்தில் தீவிரவாதி இருப்பதாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அவருக்கு முதலுதவி அளித்து விட்டு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அவர் தீவிரவாதி இல்லை என்றும் அவரது பெயர் Cheung எனவும் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதற்காக அவர் பெட்ரோல் குண்டை உபயோகித்துள்ளார் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

bb bbb bbbbb - Copy

Previous Post

சசிகலாவை முடக்க பன்னீர்செல்வத்தின் வியூகம் இதுதானா?!

Next Post

கொழுந்துவிட்டு எரியும் பாரிஸ்: கலவரத்தை கட்டுப்படுத்த திணறும் பொலிஸ்!

Next Post
கொழுந்துவிட்டு எரியும் பாரிஸ்: கலவரத்தை கட்டுப்படுத்த திணறும் பொலிஸ்!

கொழுந்துவிட்டு எரியும் பாரிஸ்: கலவரத்தை கட்டுப்படுத்த திணறும் பொலிஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures