Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழக சட்டப் பேரவை அலுவல்கள் நேரலை தொடர்பான விவகாரம் : எதிர்க்கட்சி – ஆளுங்கட்சி காரசாரமான விவாதம்

August 21, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு

தமிழக சட்டப் பேரவையின் அலுவல்கள் நேரலை செய்யப்படுவது தொடர்பாக சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதியும், ஆளுங்கட்சியினரும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை தலைவர் விளக்கம் அளித்து பல பேச்சுக்களை அவை குறிப்பில் இருந்து நீக்கினார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,  முதல்வர் தன்னுடைய மேசையில் மூன்று கோப்புகள் இருப்பதாக திமுக அரசை குற்றம் சாட்டும் வகையில் பேசினார். அதை அவர் பார்க்க வேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள்? ஜோசியக்காரர் சொன்னால்தான் முதல்வர் பார்ப்பாரா? அந்த மூன்று கோப்புகள் மீது ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசுவது போல் எல்லாம் சட்டப்பேரவையில் பேசினால் சரி வராது” என்றார்.

உடனே ஆளுங்கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு திமுக உறுப்பினர்களும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள்.

இது தொடர்பாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் விளக்கம் அளித்தார்கள்.‌

இந்நிலையில் சட்டப் பேரவை தலைவர், ” முதல்வர் பேசியதை, ‘சினிமாவில் பேசியது போல பஞ்ச் டயலாக்’ என்று சொன்னால்.. எப்படி ஆளுங்கட்சியினர் எதிர்க்காமல் இருப்பார்கள்’ என குறிப்பிட்டபோது,

மீண்டும் உதயநிதி எழுந்து, ‘கோப்புகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்கட்டும். இந்த உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்’ என பதிலளித்தார்.

இதைத் தொடர்ந்து, ‘சினிமா போல பஞ்ச் டயலாக்’ என்ற வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக பேரவை தலைவர் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், ” சட்டப் பேரவையில் நாங்கள் பேசியவற்றை அவை குறிப்பில் இருந்து நீக்கிவிட்டீர்கள். ஆனால் இவை அனைத்தும் நேரலையில் சென்றுவிட்டது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? சட்டப் பேரவை அலுவல்களின் நேரலையை நாங்கள் எதிர்க்கவில்லை. அது ஒரு நல்ல முயற்சி. அதனை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் அவைக்குறிப்பில் இருந்து நீங்கள் நீக்கியவையெல்லாம்… சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது’ என்றார்.

இதற்கு பதிலளித்த பேரவை தலைவர் ஜே சி டி பிரபாகர், ” குற்றச்சாட்டுகளை எந்தப் பக்கம் இருந்து வைத்தாலும் ஆதாரபூர்வமான கருத்துக்களை சொல்வதன் மூலமாகவே அவையின் குறைந்தபட்ச மாண்பை நாம் காப்பாற்ற முடியும். அதேவேளையில் ஆதாரமற்ற கருத்துகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டியது என்பது இந்த அவையின் மரபு.

இனி வருங்காலத்திலும் அவை குறிப்பில் இருந்து நீக்குவது என்பது எனது தனிப்பட்ட உரிமை. ஏனெனில் அவையின் மாண்பை காப்பாற்றியாக வேண்டும்.

எல்லா பேச்சுகளையும் நீக்குவது என்பது எனது நோக்கம் அல்ல. இருப்பினும் அவைக்கு பயன் தராத, நம் பண்பாட்டுக்கு உதவாத, அவையின் மாண்பை குறைக்கக்கூடிய, எந்த விடயமாக இருந்தாலும் அவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவேன்” என்றார்.

Previous Post

ஊடகவியலாளர்களுக்கு வீடுகள் : ஊடக அமைச்சு விண்ணப்பம் கோரல்!

Next Post

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : இலங்கை குழாத்தில் இரண்டு மாற்றங்கள்

Next Post
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : இலங்கை குழாத்தில் இரண்டு மாற்றங்கள்

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : இலங்கை குழாத்தில் இரண்டு மாற்றங்கள்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

லௌசேன்  வண்டா டயமண்ட் லீக்  ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க முதலிடம் பெற்று சரித்திரம் படைத்தார்

லௌசேன்  வண்டா டயமண்ட் லீக்  ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க முதலிடம் பெற்று சரித்திரம் படைத்தார்

August 22, 2026
மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதை பொருள்களுடன் இரு இளைஞர்கள் கைது

புதையல் தோண்ட முயன்ற 3 சந்தேகநபர்கள் புலத்சிங்களவில் கைது!

August 22, 2026
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

மாகாணசபைத் தேர்தல் | அரசாங்கத்தின் செயற்பாடுகள் மந்தகரம் | பாராளுமன்ற விசேட செயற்குழுவில் அதிருப்தி !

August 22, 2026
வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள் – பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு!

வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள் – பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு!

August 22, 2026

Recent News

லௌசேன்  வண்டா டயமண்ட் லீக்  ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க முதலிடம் பெற்று சரித்திரம் படைத்தார்

லௌசேன்  வண்டா டயமண்ட் லீக்  ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க முதலிடம் பெற்று சரித்திரம் படைத்தார்

August 22, 2026
மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதை பொருள்களுடன் இரு இளைஞர்கள் கைது

புதையல் தோண்ட முயன்ற 3 சந்தேகநபர்கள் புலத்சிங்களவில் கைது!

August 22, 2026
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

மாகாணசபைத் தேர்தல் | அரசாங்கத்தின் செயற்பாடுகள் மந்தகரம் | பாராளுமன்ற விசேட செயற்குழுவில் அதிருப்தி !

August 22, 2026
வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள் – பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு!

வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள் – பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு!

August 22, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures