வவுனியா மாநகர சபை முதல்வர் காண்டீபன், சாவகச்சேரி நகரசபை உதவித் தவிசாளர் ஆகியோரின் பதவி மற்றும் உறுப்புரிமை வடக்கு ஆளுநரால் நீக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சி தலைவரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம் வெளியிட்டார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (25) வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அவர் கண்டனம் வெளியிட்டார்.
அதேவேளை பாராளுமன்றில் நேற்று (24) புதன்கிழமை கொண்டாடப்பட்ட சுற்றுச்சூழல் சட்டம் மூலம் மாகாண சபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுவது பற்றியும் குற்றஞ்சாட்டினார்.













