இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான 11-வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகளில் பங்கேற்பதற்காக, ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ட்ரே ருடென்கோ எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதையும் இந்த பயணம் நோக்கமாக கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

