யாழ். அல்லைப்பிட்டியில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் நிலை தொடர்பில் நிலையான விசாரணை அவசியம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(17.02.2026) கருத்து தெரிவித்த அவர்,
யாழில் அண்மையில் சிறுவன் ஒருவர் காவல்துறையின் அடாத்தான செயற்பாடுகளால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.
விசாரணை
இதற்கு இது வரையில் சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.

காவல்துறையால் சுட்டுக்கொள்ளப்பட்ட அந்த சிறுவனின் குடும்பத்தினர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு சரியான தீர்வு அவசியம்” என தெரிவித்துள்ளார்.
